கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக விஜய் நாளை சிபிஐ முன் ஆஜராக உள்ளார். இதற்காக இன்று அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
நாளை காலை செல்லாமல் இன்றைக்கே விஜய் செல்வதால் அவர் டெல்லியில் பாஜக மேலிடத்தலைவர்களை சந்திக்க விருக்கிறார். கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை அங்கே நடக்கவிருக்கிறது என்ற தகவல் பரவுகிறது.

இந்நிலையில் இன்று தனது உதவியாளர்கள் மற்றும் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோருடன் தனி விமானத்தில் டெல்லி சென்றார் விஜய். சென்னை விமான நிலையத்தில் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் அவர் தனி விமானத்தில் சென்று ஏறினார்.
அப்போது அவரிடம் இருந்த கைப்பையை மத்திய பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அதில் கத்தரிக்கோல் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் விஜய்யை விமானத்திலேயே அமர வைத்து மேற்கொண்டு சோதனை நடத்தி இருக்கிறார்கள். அவரிடம் விசாரணை நடந்திருக்கிறது. பின்னர் கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்த பின்னர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டிருக்கிறார் விஜய். இதனால் 20 நிமிடங்கள் தாமதம் ஆகியிருக்கிறது.
20 நிமிடங்கள் தாமதம் ஏன் என்று விமான பைலட் விசாரித்தபோது, விவரம் தெரியவந்ததும், விஜய் ஏன் பைக்குள் கத்தரிக்கோல் வைத்திருந்தார்? என்று அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.



