ஆரம்பத்தில் விஜய் அரசியல் ரீதியாக மிகவும் கூர்மையான முடிவுகளை எடுப்பார் என்று நினைத்தேன். ஆனால் தற்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, அந்த நம்பிக்கையில் சந்தேகம் எழுகிறது என்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி.
அவர் இது குறித்து மேலும் தனது பதிவில், ’’தவெக ஆட்சியில் பல அதிகார மையங்கள் இருக்காது” என்று தொடர்ந்து விஜய் கூறிவந்த நிலையில், தற்போது கட்சியின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகளில் ஆதவ் அர்ஜுனா குடும்பத்தின் செல்வாக்கு அதிகரித்து வருவது போல் தெரிகிறது. இதனால், கட்சியின் திசை மற்றும் கட்டுப்பாட்டை விஜய் மெதுவாக இழந்து வருகிறாரோ என்ற கேள்வி எழுகிறது என்ற சந்தேகத்தையும் முன்வைக்கிறார்.

உண்மையில், தவெக என்பது அவர்களால் முழுமையாக முதலீடு செய்யப்பட்டு, தற்போது அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசியல் அமைப்பாக மாறிவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஏற்கனவே மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) மூலம் நிதியுதவி வழங்கியவர்கள், இப்போது நேரடியாக ஒரு அரசியல் கட்சியையே தங்களின் புதிய அரசியல் முதலீடாக மாற்றிவிட்டார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது என்றும் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.



