ஈரானில் கடந்த சில மாதங்களாக முடக்கப்பட்டிருந்த சர்வதேச இணைய சேவையை மீண்டும் வழங்குவதற்குக் குடியரசுத் தலைவர் மசூத் பெசெஷ்கியன் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக ஈரானில் சர்வதேச இணையப் பயன்பாட்டிற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. தற்போது நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்களின் கோரிக்கைகளை ஏற்கும் வகையிலும், சர்வதேச இணைய சேவைகளை படிப்படியாக பழைய நிலைக்குக் கொண்டு வர அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இருந்தபோதிலும், சர்வதேச இணைய சேவை வழங்கப்பட்டாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஈரான் தனது சொந்த ‘தேசிய தகவல் கட்டமைப்பு’ (National Information Network) மூலமாகவே இதைக் கண்காணிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பால் ஈரானில் உள்ள நெட்டிசன்களும், ஆன்லைன் வணிகம் செய்வோரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.(Online Tamil News)


