லாட்டரி மார்ட்டின் மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது உயர்நீதிமன்றம்.

கடந்த 2009,2010ம் ஆண்டுகளில் விதிகளை மீறி சிக்கிம் மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததில் 910 கோடி ரூபாய் சிக்கிம் மாநிலத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாக லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. கேரளம் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலைவயில் இருக்கின்றது.

இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடுகளில் சோதனை நடத்தினர். சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனைகளின் முடிவில் மார்ட்டின் தொடர்புடைய 457 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கம் செய்தது. இதில் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்தது. இதை எதிர்த்து மார்ட்டின், அவரது மனைவி லீமா ரோஸ், மகள் டெய்சி ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த அமர்வு, 6 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அளித்து வழக்கின் மறு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.



