இளையுதிர்காலம் போய், கிளையுதிர்காலமும் போய் இப்போது பக்கவேர்கள் உதிரும் காலத்தில் இருக்கிறது ஓபிஎஸ் அணி. இப்போது கூட எப்படி படபடக்காமல் இருக்கிறார் ஓபிஎஸ் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
இதை பலமுறை சொல்லிவிட்டேன். 50 முறைக்கு மேல் சொல்லிவிட்டேன். அரைத்த மாவையே அரைக்க வேண்டாம். ஓபிஎஸ்சை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பில்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகச் சொன்ன பின்னரும் கூட, அதிரடியாக எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கும் ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் வைத்திலிங்கம்.

முதன் முதலில் அமித்ஷாவோடு சோழா ஓட்டலில் கூட்டணி ஒப்பந்தம் செய்தபோதே அதிமுகவின் உள்விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று சொல்லிவிட்டார் அமித்ஷா. அதை இப்போது வரையிலும் கடைபிடித்து வருகிறார் என்று பழனிசாமி சொல்வதைப் பார்த்தால் பன்னீர்செல்வம் விவகாரத்தில் பாஜக டெல்லி மேலிடம் தலையிடாது என்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விலகிச் சென்றுவிட்டனர். இது இளையுதிர்காலம் ஆனது ஓபிஎஸ் அணிக்கு. அடுத்தபடியாக இலையுதிர் காலம் போய் பன்னீர்செல்வம் அணி கிளையுதிர்காலத்தில் இருந்தது. மனோஜ்பாண்டியன், ஜேசிடிபிரபாகர் உள்ளிட்டோரும் விலகினர்.

அப்போதும் கூட, தைபிறந்தால் வழி பிறக்கும் என்று அசட்டு தைரியத்தில் இருந்தார் ஓபிஎஸ். இந்த அசட்டு தைரியத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார் வைத்திலிங்கம். ஓபிஎஸ் அணியின் பக்க வேராக இருந்த அவரும் ஓபிஎஸ்சின் தொடர் மவுனத்தை கண்டு மனம் வெதும்பி விலகிவிட்டார். திமுகவிலும் இணைந்துவிட்டார். தைபிறந்தால் வழி பிறக்கும் என்று பன்னீர்செல்வம் சொன்னது இதுதானா? என்று கேள்வி எழுகிறது.
பக்கவேர்கள் உதிரும் காலத்திலும் கூட பன்னீர்செல்வம் படபடக்காமல் இருப்பது அரசியல் அதியசம்தான்.



