தேர்தல் முடிவுக்கு பின்னர் ஏற்பட்ட அதிருப்தியில் அதிமுக இரு அணிகளாக பிரிந்து நிற்கின்றன. எடப்பாடி – வேலுமணி இருவரும் இரு அணியாக பிரிந்து நிற்கின்றனர். வேலுமணிக்கு பக்கபலமாக நின்று இயக்குகிறார் சிவி சண்முகம்.
தவெகவுக்கு ஆதரவளிப்பதிலும் இரு அணியாக நின்று செயல்பட்டனர். தற்போது வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் தவெக அமைச்சரவையில் இடம்பெற இருக்கும் நிலையில் அவர்கள் கட்சித்தாவல் சட்டம் மூலம் பதவியை இழக்க நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார் எடப்பாடி.

இதனால் அதிமுக பொதுக்குழுவை கூட்ட கட்சியின் பொதுச்செயலாளர் ஆக வேலுமணி முயன்று வருகிறார்.
இந்த முயற்சியில் அதிமுகவின் 82 மாவட்டச் செயலாளர்களின் 50க்கும் மேற்பட்டோர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவளித்துள்ளனர். பொதுக்குழுவை கூட்ட முடியாது என்கிறார் எடப்பாடி. ஆனால், உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் குரல் எழுப்பும்போது பொதுக்குழுவை கூட்ட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் கடும் நெருக்கடியில் இருக்கிறார் எடப்பாடி.



