அந்த மூன்று மணி நேர சந்திப்பிற்கு பின்னர் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லிவிட்டு விடைபெற்றிருக்கிறார் விஜய். கடம்பூர் செல்வராஜு மூலம் அதுகுறித்த போட்டோ ஒன்று வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2017ம் ஆண்டில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வெளிவந்தது. இந்தப்படத்தின் ரிலீசின் போது சிக்கல் வந்தது. படத்தில் விலங்குகள் துன்புறுத்தப்பட்டதாக புகார் எழுந்து, அது பட ரீலீசை தள்ளிப் போட்டது. அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி அந்த பிரச்சனையை தீர்த்துக்கொண்டார் விஜய்.

இதுகுறித்து அப்போது அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜூ, ’’விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை என்கிற சான்றிதழ் இடம்பெற்றால் மட்டுமே மெர்சல் படம் வெளியாகும் நிலை இருந்தது. தீபாவளி நேரம் என்பதால் படம் தாமதமாக வந்தால் வசூல் பாதிக்கும் நிலை.
நிலைமையை சரி செய்ய எடப்பாடி பழனிசாமியை பார்க்க வந்தார் விஜய். 10 நிமிடம், 20 நிமிடம் அல்ல, 3 மணி நேரம் உட்கார்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். ஞாயிற்றுக்கிழமை வந்து உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடனே ட் டெல்லிக்கு பேசி இரவோடு இரவாக அதிகாரிகளை வரவைத்து தீர்வு கண்டதால் படம் திட்டமிட்டபடி வந்தது.

அப்போது விஜய் சொன்ன வார்த்தைகள்தான் முக்கியம். உதவி செய்ததற்காக வாழ்நாள் முழுவந்தும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று சொன்னார். விஜய்க்கு அரசியல் வேண்டாம். அவரது படம் மீண்டும் வெளிவர பிரச்சனை இருந்தால் சரி செய்வோம். அன்று அப்படி பேசிய விஜய் இன்றைக்கு அதிமுகவை இப்படி பேசுகிறார்’’ என்றார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தவெகவில் இருந்து 500 பேர் விலகி அதிமுகவில் இணைந்த நிகழ்வில் இந்த இதை நினைவுகூர்ந்தார் கடம்பூர் ராஜூ.



