ஆஸ்திரேலிய அரசு 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்துள்ளது. காரணம், சமூக ஊடகம் குழந்தைகளின் மனநலையும், பாதுகாப்பையும் பாதிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்து தடை செய்தது. மேலும், விதிகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளது.
சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை
இந்த நிலையில், இதேபோல் தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திரப்பிரதேச அரசு தற்போது 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்துவது குறித்து புதிய கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய பரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளது. இது ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள (under‑16 social media ban) மாதிரியானதாக இருக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்தர மாநில தொழில்நுட்ப மற்றும் கல்வி அமைச்சர் நாரா லோகேஷ், குறைந்த வயதிலேயே சமூக ஊடகங்களில் இணைவது குழந்தைகளின் மனநல மற்றும் பாதுகாப்பிற்கு தீங்காக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.மேலும், இவர்களின் பார்வைக்கு ஏற்ற உள்ளடக்கம் அல்லாத தகவல்கள் சில சமயங்களில் தவறான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கருத்து தெரிவித்து உள்ளார்.
அரசு குழு அமைப்பு மற்றும் பரிந்துரைகள்
அந்தரா அரசு ஒரு Group of Ministers (GoM) அமைத்து, சமூக ஊடகத் தடையை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளை ஆராந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த குழுவில் IT, கல்வி உள்ளிட்ட அமைச்சர்கள் அடங்கியுள்ளனர். இந்த குழு ஒரு மாதத்திற்குள் அரசுக்கு தங்களின் பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் திட்டமிட்டுள்ளது.
சவால்கள் மற்றும் எதிர்வினைகள்
GoM குழு, சமூக ஊடகங்களில் தவறான தகவல் மற்றும் தவறான பயனாளர்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது. இருப்பினும், வயது சரிபார்ப்பு தொழில்நுட்ப சவால்கள், சட்ட ரீதியான கடுமைகள், மற்றும் நடைமுறை அனுமதி போன்ற பிரச்சனைகள் இன்னும் தீராத நிலையில் உள்ளன. பெற்றோர் சிலர் இதனை பாதுகாப்பான முடிவாகவே பார்க்கிறார்கள். ஆனால் சில நிபுணர்கள், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் சட்ட ரீதியான கட்டுப்பாடுகளை இழுக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர். இருப்பினும், ஆந்திரப்பிரதேச அரசு இன்னும் அதிகாரப்பூர்வ சட்டம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.(Online Tamil News)


