மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு கடும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 9 சதவீதம் அதிகரித்து 93 அமெரிக்க டாலராக (சுமார் ₹8,550) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலைகள் உயரத் தொடங்கியுள்ளன.
இந்தச் சூழல் உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தியை நிறுத்தக்கூடும் என்றும் கத்தார் நாட்டின் எரிசக்தி துறை மந்திரி எச்சரித்துள்ளார். சர்வதேச அளவில் இந்த விலை உயர்வு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினாலும், இந்தியாவில் போதுமான அளவு கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2020 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை தற்போதுதான் இந்த அளவிற்கான உச்சத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.(Online Tamil News)


