• அரசியல்
    அரசியல்Show More
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    Apr 2, 2026 at 6:33 pm
    l murugan
    எல்.முருகன் துணை முதல்வர்! டெல்லி எடுத்த முடிவு
    Apr 2, 2026 at 6:11 pm
    vijay campaign
    பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி வாக்கு சேகரித்த விஜய்
    Apr 2, 2026 at 1:32 pm
    trichy road show vijay
    நடுரோட்டில் நடந்த விஜய் – விபத்தில் சிக்கிய ரசிகையால் பரபரப்பு
    Apr 2, 2026 at 12:35 pm
    seeman
    விஜய் செய்யுறது மக்கள் விரோதச் செயல் – சீமான் விளாசல்
    Apr 1, 2026 at 6:40 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ponmudi
    பொன்முடி விடுதலை – வழக்கின் பின்னணி என்ன?
    2026-04-02
    Madampatti Rangaraj ,
    மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை: டிஎன்ஏ சோதனையில் உறுதி!
    2026-03-30
    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23

    அண்மைச் செய்திகள்

    Mediterranean Sea
    அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
    2026-04-02
    NASA Artemis II mission
    50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு ஏவப்பட்ட NASA-வின் Artemis II
    2026-04-02
    Iran drone attack
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    dhanabal
    தவெகவுக்கு தாவுகிறாரா மாஜி சபாநாயகர் தனபால்?
    2026-04-02
  • இந்தியா
    இந்தியாShow More
    Yashoda and Krishna painting ,
    ராஜா ரவிவர்மாவின் ‘யசோதா& கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167 கோடிக்கு விற்று உலக சாதனை!
    Apr 2, 2026 at 5:50 pm
    Jayalalithaa Hyderabad house sealed
    சொத்து வரி நிலுவை: ஹைதராபாத்தில் ஜெயலலிதா இல்லத்திற்கு சீல்!
    Mar 31, 2026 at 7:03 pm
    Mehsana Incident,
    குஜராத் தீ விபத்து: ஃபோம் ஷீட்கள் தீப்பற்றியதில் 5 பேர் உயிரிழப்பு!
    Mar 31, 2026 at 6:24 pm
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
  • உலகம்
    Iran drone attack
    உலகம்
    பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
    2026-04-02
    Indonesia ,
    உலகம்
    இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
    2026-04-02
    Oracle layoffs 2026
    உலகம்
    AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
    2026-04-01
    Dubai maritime incident,
    உலகம்
    துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
    2026-03-31
    No kings
    உலகம்
    “No Kings“- அமெரிக்காவில் ட்ரம்ப் அரசுக்கு எதிராக வெடித்தது போராட்டம்!
    2026-03-30
    volcano-Earth-Secrets-research-truths-about-volcanoes-global-warming-climate-change-worldnews-tamil-science-news-tamilnews
    உலகம்
    எரிமலைகளுக்குள் என்ன நடக்கிறது?
    2026-01-14
    online-tamil-news-world-news-world-record
    உலகம்
    உலக சாதனை: மவுண்ட் எல்ப்ரஸில் ஆக்ஸிஜன் இன்றி 24 மணி நேரம்!
    2026-01-24
    Donald Trump, NATO countries,
    உலகம்
    “நேட்டோ நாடுகள் கோழைகள்” – ஈரானுக்கு எதிரான போரில் ஆதரவு தராததால் டிரம்ப் விமர்சனம்
    2026-03-21
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தலையங்கம்: பட்டாவும் பணியிடங்களும்
Share
28°C
Chennai
mist
29° _ 27°
81%
3 km/h
Fri
31 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம்: பட்டாவும் பணியிடங்களும்

Spark Web Desk
Last updated: 2025-02-13 12:39 pm
Spark Web Desk Spark Web Desk 112 Views
Share
SHARE

மகாகவி பாரதியார் காணி நிலம் வேண்டும் என பராசக்தியிடம் கேட்டார். ஏழை-எளியவர்கள் தாங்கள் குடியிருக்க வேண்டிய அளவுக்கு ஒரு நிலம் வேண்டும் என்பதைத்தான் காலம் காலமாகக் கேட்டு வருகின்றனர். பராசக்தி படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதிய கலைஞர் மு.கருணாநிதி அந்தப் படத்தில், ஒரு குடிசைகூட இல்லாமல் தவிக்கும் குடும்பத்தின் அவல நிலையை எடுத்துக் காட்டியிருப்பார். பிறகு, அவர் ஆட்சிக்கு வந்தபோது, குடியிருப்போருக்கே அந்த மனையை சொந்தமாக்கும் வகையில், தமிழ்நாடு குடியிருப்பு அனுபோகதாரர்கள் சட்டம் கொண்டு வந்தார். விவசாயிகள் உள்ளிட்ட ஏழை மக்கள் 1 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை கிடைத்தது. இது நடந்து 50 ஆண்டுகளாகிவிட்டன. தற்போதைய நிலை என்ன?

கடந்த மூன்றாண்டுகளில் 10 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு பட்டா வழஙகப்பட்டிருப்பதாக வருவாய்த் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்னும் 6 மாத காலத்திற்குள்ளாக 6 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்று பிப்ரவரி 10ந் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, ‘பெல்ட் ஏரியா’ எனப்படும் சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியில், ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் 29ஆயிரத்து 187 பேருக்கு பட்டா கிடைக்க வழிவகை செய்யப்படும் என அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நெல்லை உள்ளிட்ட பிற மாவட்டங்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் மொத்தம் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க வேண்டும். இதனை 6 மாதத்தில் நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சேபணையற்ற புறம்போக்கு நிலத்தில் 50, 60 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மக்கள் பலவிதமான வரிகளை செலுத்தி வந்தாலும், அவர்களுக்கு அந்த இடத்திற்கான உரிமை எதுவும் கிடையாது. அந்த இடத்தின் பேரில் கடன் பெற முடியாது. வாடகைக்கு விடுவது உள்ளிட்ட எந்தவொரு முயற்சியாக இருந்தாலும் முழுமையாக சாத்தியப்படாது. சட்டச் சிக்கல்கள் எழும். எனவே, தங்களுடைய இடங்களுக்கு பட்டா கிடைத்தால், உரிமையுடன் வாழ முடியும் என்பதே அந்த மக்களின் கோரிக்கை. 1962ஆம் ஆண்டு முதல் நீடிக்கக்கூடிய இந்தப் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண வேண்டும் என அமைச்சரவை முடிவெடுத்திருப்பது நல்ல அம்சம். மகன் அல்லது மகளின் திருமணம், வேலைவாய்ப்புக்கு பணம் தேவைப்படுகிறது என்றால் பட்டா நிலமாக இருநதால் கடன் பெற முடியும். நிலத்தின் மீதான உரிமையும் கிடைக்கும்.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் பலரும் நீண்டகாலமாக எதிர்பார்த்திருக்கும் மனைப் பட்டா விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடம் காண முடிகிறது. அரசுத் தரப்பில் 6 மாதத்திற்குள்ளாக இதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு, உரியவர்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டால் தங்கள் வாழ்நாள் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக மக்கள் கருதுவார்கள்.

அரசு மூலமாக வீட்டு மனைப் பட்டா விரைந்து கிடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பது போலவே, அரசாங்கப் பணிகளில் உள்ள காலியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களிடமிருந்து தொடர்ந்த வெளிப்பட்டு வருகிறது. நீண்டகாலமாக தற்காலிகப் பணியாளர்களாக இருக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களை நிரந்தரமாக்குவதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் பயன் பெறக் கூடியவர்களின் குடும்பத்தினர் நிம்மதிப் பெருமூச்சு விடுவதைக் காண முடிகிறது.

பள்ளிக்கல்வித் துறை போலவே உயர்கல்வித் துறையில் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான காலியிடங்கள் ஒரு மாமாங்கமாக காலியாக உள்ளது. கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கும் மற்ற மாநிலங்களைப் போல ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த ஊதியத்தை வழங்கவில்லை என்றும் கோரி தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

மின்வாரியத்தில் மீட்டர் ரீடிங் எடுக்கின்ற பணி தொடங்கி உயர்பதவிகள் வரை ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாக இருப்பதை எதிர்க்கட்சிகள் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டுகின்றன. மருத்துவத்துறையில் டாக்டர்கள், நர்ஸ்கள் தொடங்கி பல்வேறு மருத்துவ ஊழியர்களுக்கான இடங்கள் காலியாகவோ, தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டோ சமாளிக்கப்படுகின்றன. போக்குவரத்து துறையிலும் இந்த நிலை நீடிக்கிறது. இது பணியில் இருப்பவர்களுக்கு கூடுதல் சுமையை உண்டாக்கி, நிர்வாகத்திறனை வீணடிக்கிறது.

பட்டாக்களில் செலுத்தப்படும் கவனம் பணியிடங்களை நிரப்புவதிலும் தேவை.

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article Governor Ravi Tamil Nadu SUpreme Court ஆளுநர் வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் 12 கேள்விகள்!
Next Article Starlink Elon Musk Ambani Jio Airtel Starlink உடன் போட்டி போடும் Airtel, Jio!

உலகம்

Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலகம் Apr 2, 2026 at 6:44 pm
Indonesia ,
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்- மக்கள் பீதி!
உலகம் Apr 2, 2026 at 12:52 pm
Oracle layoffs 2026
AI-க்கு மாறும் ஆரக்கிள்: 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
உலகம் Apr 1, 2026 at 5:06 pm
Dubai maritime incident,
துபாய் அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
உலகம் Mar 31, 2026 at 12:27 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

Mediterranean Sea
அடுத்த 30 ஆண்டுகளில் கடலுக்கு அடியில் காத்திருக்கும் பேராபத்து!
Apr 2, 2026 at 6:59 pm
Iran drone attack
பஹ்ரைனில் அமேசான் தரவு மையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்!
Apr 2, 2026 at 6:44 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?