நடிகை ஒருவருடன் தன் கணவர் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதால், பலமுறை கண்டித்தும் அதை அவர் கைவிட மறுப்பதால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் சங்கீதா.
இந்த விவகாரம் பெரிதாக சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் நடிகை த்ரிஷாவுடன் ஒரே காரில் ஒன்றாக திருமண வரவேற்புக்கு வந்திருந்தார் விஜய். இது பெரும் சரச்சையை ஏற்படுத்தியது.

’’விஜய்க்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகம். அவர் ஒரு வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றால் அது பரபரப்பாகுது’’ என்று ஒரு நிகழ்ச்சியில் பேசி கலகலப்பூட்டினார் இயக்குநர் பார்த்திபன்.

ஒரு ஊடக நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பார்த்திபன், ‘’குந்தைவையை வீட்டிலேயே குந்தவைத்தால் பிரச்சனைகள் வராமல் இருக்கும்’’ வார்த்தை ஜாலமாக சொல்லப்போக, கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார் த்ரிஷா. இதற்கு பார்த்திபன் வருத்தம் தெரிவித்தாலும், சங்கீதாதான் விஜய் மனைவி. த்ரிஷா மூணாம் மனுசி. அவரோட செயல் மூணாம்தர செயல் என்று கடுமையாக பதிலடி கொடுத்திருந்தார்.

சர்ச்சைகளும் சலப்புகளும் இருந்து வரும் சூழலில் த்ரிஷாவிடமே இது பற்றி கேள்வி எழுப்பினார் அந்த நிருபர். சென்னை விமான நிலையத்தில் த்ரிஷாவிடம் சென்று, ‘’விஜய்யுடம் நீங்கள் ஒன்றாக திருமணம் நிகழ்வில் பங்கேற்றது சர்ச்சையாகி இருக்கிறதே?’’ என்று கேட்க, அந்த கேள்வியை நிதானமாக காதில் வாங்கிக்கொண்ட த்ரிஷா, அதற்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.



