மின்னலே படத்தில் தொடங்கி காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் விண்ணைத்தாண்டி வருவாயா என்று தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். அவர் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. இதை முன்னிட்டு அவர் கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்து நன்றி சொல்லி இருக்கிறார்.

’’கால் நூற்றாண்டு கால காட்சிகள் மற்றும் உணர்வுகள்: சினிமா என்பது நகரும் பிம்பங்களைப் பதிவு செய்வது மட்டுமல்ல, அது காலத்தையே பதிவு செய்வது என்று அடிக்கடி சொல்லப்படுகிறது.
நான் முதன்முதலில் “ஆக்ஷன்” என்று குரல் கொடுத்த நாளிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் இந்தத் தருணத்தில், கடந்து போன காலத்தால் அல்ல, மாறாக அந்த காலம் எனக்கு வாரி வழங்கிய நினைவுகளின் பெருக்கத்தால் நான் திக்குமுக்காடிப் போகிறேன்.
இந்த அற்புதமான, சவால்கள் நிறைந்த துறையில் 25 ஆண்டுகள் என்பது ஒரு தனிப்பட்ட சாதனை அல்ல. அது, என்னுடன் பயணித்த எண்ணற்ற தனிநபர்களின் கனவுகள், அர்ப்பணிப்பு மற்றும் திறமையால் நெய்யப்பட்ட ஒரு கலைப்படைப்பு.

எனது ஆழ்ந்த நன்றியும் அன்பும் கலைஞர்களுக்கே உரித்தானது: என் மனதில் இருந்த கற்பனைக் கதாபாத்திரங்களுக்கு ஒரு ஆன்மாவையும், குரலையும், இதயத் துடிப்பையும் வழங்கிய நடிகர்களே. என் வார்த்தைகளுக்கு நீங்கள் உயிர் கொடுத்தீர்கள்; நான் உணராத ஆழங்களை அந்தக் கதாபாத்திரங்களில் கண்டறிந்தீர்கள்.
எனது படக்குழுவினருக்கு: இருபத்தைந்து ஆண்டுகளாக என்னுடன் கேமராவுக்குப் பின்னால் நின்ற, என் கற்பனையின் அமைதியான சிற்பிகளே, உங்களுக்கான என் நன்றியும் மரியாதையும், சினிமா மீது நாம் கொண்டுள்ள அன்பைப் போலவே ஆழமானது.

நான் ஜாம்பவான்களின் தோள்களின் மீது நிற்கிறேன்; சினிமாவின் ஆசான்கள், யாருடைய படைப்புகள் எனக்குள் அந்தத் தீப்பொறியைப் பற்ற வைத்தனவோ, மற்றும் என் ஆரம்ப காலப் படிகளுக்கு வழிகாட்டிய என் வழி காட்டிகளுக்கும் – எனக்கு வழி காட்டியதற்கு நன்றி.
என் சமகாலத்தவர்களுக்கும் சக இயக்குநர்களுக்கும், உங்கள் படைப்புகள் தினமும் எனக்கு சவாலையும் உத்வேகத்தையும் அளிக்கின்றன. கதை சொல்லும் இந்த பொதுவான பயணத்தில் நாம் பகிர்ந்துகொள்ளும் தோழமை விலைமதிப்பற்றது.
இறுதியாக, என் அன்பான ரசிகர்களுக்கு. என் கதைகளை உங்கள் வாழ்வில் ஏற்றுக் கொண்டீர்கள், என் கதாபாத்திரங்களை உங்கள் உரையாடல்களில் வாழ அனுமதித்தீர்கள். மேலும் நான் சித்தரிக்க முயன்ற அன்பு, மோதல்கள் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களையும் ஏற்றுக்கொண்டீர்கள். உங்கள் அங்கீகாரமே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெகுமதி.

#YennoduVaaVeeduVaraikkum இசை நிகழ்ச்சியில் ஒரு நம்பமுடியாத மற்றும் மறக்க முடியாத இரவை வழங்கியதற்கு நன்றி. நான் ஏன் இதைச் செய்கிறேன் என்பதை நினைவூட்டிய ஒரு ஆத்மார்த்தமான தருணம் அது.
சினிமாவுடனான என் காதல் பயணம் தொடர்கிறது. அடுத்த காட்சி காத்திருக்கிறது… அதுவரை, அன்புடன், கௌதம் வாசுதேவ் மேனன்’’



