என்னிடம் சவால் விட்ட எவனும் ஜெயிச்சதில்ல என்று அன்புமணிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ராமதாஸ்.
பாமக சார்பில் தர்மபுரியில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ராமதாஸ் பிரச்சாரம் செய்வாரா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ’’என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்’’ என்று சவால் விடுத்தார்.

இது குறித்து கேள்விக்கு, ‘’என்னிடம் சவால் விட்ட எவனும்…’’ என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார் ராமதாஸ். அப்போது அருகில் இருந்த ராமதாஸ் மகள், ‘’ஜெயிச்சதில்ல’’ என்று கடைசி வார்த்தையைச் சொல்கிறார்
தனக்கு எதிராக அன்புமணி களத்தில் நிற்பதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்றும், அது குறித்து பேசுவதே அசிங்கம் என்று சொல்லி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் ராமதாஸ்.



