முன்னாள் அதிமுகவினர் சுமாராக 40 பேர் திமுகவில் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள், அதில் சுமார் 10 பேர் எம்.ஜி.ஆரோடு பயணித்தவர்கள். புதிதாக உருவாக்கப்பட்ட தவெகவிலும் எம்.ஜி.ஆர். காலத்தவர் ஒருவர் போட்டியிடுகிறார். ஆனால் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு அவரால் வளர்க்கப்பட்ட கட்சியில் அவரோடு பயணித்தவர்களில் வளர்மதியை தவிர வேறு யாருக்கும் வாய்ப்பு வழங்காமல் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி.
மேலும், அதிமுக என்கிற கட்சிக்கு இன்றைக்கும் ஆணிவேராக காத்து நிற்பது எம்.ஜி.ஆரின் பெயரும், புகழும், அவரோடு பயணித்தவர்களுமே என்றும் சொல்லும் பழனிசாமி.

ஆனால், எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரை தனக்கு விரோதியாக நினைக்கிறார்? இல்லை எம்.ஜி.ஆரை விட தான் செல்வாக்கானவர் என்று நிரூபிக்க நினைக்கிறாரா? அல்லது எம்.ஜி.ஆரோடு பயணித்தவர்கள் மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர்கள், லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள், சுய ஒழுக்கம் , சுய கெளரவம் , சுய சிந்தனை கொண்டவர்கள் என்கிற காரணத்தினால் ஒரே அடியாக அவர்களை ஒழித்துவிட வேண்டும் என்று நினைக்கிறாரா? என்ற கேள்விகளை எழுப்புகிறார்.

ஜெயலலிதா காலத்தில் கூட தேர்தலுக்கு தேர்தல் எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதால் மட்டுமே வெற்றிவாய்ப்புகள் பெறப்பட்டது. எம்.ஜி.ஆர். புறக்கணிக்கப்பட்ட காலகட்டத்தில் எல்லாம் மிகப்பெரிய சரிவை அதிமுக கண்டிருக்கிறது. எனவே எடப்பாடி பழனிசாமியின் இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது என்கிறார் பழனிச்சாமி.



