மத்திய உள்துறை அமைச்சக்கும், மத்திய உள்துறை செயலாளருக்கும் தவெக தலைவர் விஜய் சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
சென்னையில் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் தொகுதிகளில் பிரச்சாரம் செய்த விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ளவருக்கு அதற்கான பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றும் புகார் கூறி, எதிர்வரும் நாட்களில் விஜய்யின் பிரச்சாரத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அந்த கடிதம் அனுப்பி இருக்கிறார்.

இதில் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் என்பதற்கு பதிலாக அஜய் பல்லா என்று எழுதி இருக்கிறார். அஜய் பல்லா கடந்த 2024ம் ஆண்டில் ஓய்வு பெற்று மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக தற்போது உள்ளார்.

இதைக்கூட தெரிந்துகொள்ளாமல் அதுவும் நிர்மல்குமார் தமிழக பாஜகவின் ஐடி விங் செயலாளராக இருந்தவர். அவரே இதைக்கூட கவனிக்காமல் அனுப்பி இருக்கிறாரே என்று வறுத்தெடுக்கின்றனர் நெட்டிசன்கள்.



