கர்நாடக மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்த அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, கல்வி மற்றும் குழந்தைகளின் நலன் சார்ந்த ஒரு மிகமுக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். என்னவென்றால் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் சமூக ஊடகங்களைப் (Social Media) பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

கர்நாடக அரசின் இந்த அதிரடி முடிவிற்குப் பின்னால் உள்ள மிக முக்கியமான காரணம், சமூக ஊடகங்களால் சிறுவர்களின் மனநலம் மற்றும் கல்வியில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதே ஆகும். இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு சிறுவர்களிடையே பெரும் தாகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, சைபர் குற்றங்கள் மற்றும் தேவையற்ற மன அழுத்தங்களுக்கு அவர்களை ஆளாக்குகிறது. இதனை முறைப்படுத்தும் விதமாக, 16 வயது நிறைவடையாதவர்கள் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் தடையைச் செயல்படுத்துவதற்காகப் புதிய சட்டத் திருத்தங்கள் மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வரவும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையுடன் இணைந்து இதற்கான விழிப்புணர்வுப் பணிகளும் முன்னெடுக்கப்பட உள்ளன. இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத வகையில், கர்நாடக அரசு எடுத்துள்ள இந்த முன்னோடி முயற்சி நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு ஒரு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது. “எதிர்காலத் தலைமுறையினரைத் டிஜிட்டல் போதையிலிருந்து மீட்டு, அவர்களை ஆக்கப்பூர்வமான பாதையில் கொண்டு செல்ல இந்த நடவடிக்கை உதவும்” எனப் பட்ஜெட் உரையின் போது முதலமைச்சர் சித்தராமையா சுட்டிக்காட்டினார்.(Online Tamil News)


