எகிப்து பாராளுமன்றம் தற்போது சிறுவர்கள் மற்றும் வாலிபர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
சமூக ஊடகங்கள்பயன்படுத்த தடை
எகிப்து (Egypt) அரசு தற்போது 18 வயதிற்கும் குறைந்த குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது குறைப்பதை நோக்கமாக ஒரு புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளது. இவை சமூக ஊடகங்களில் பாதுகாப்பு உள்ளடக்கம், சைபர் தாக்குதல், துன்புறுத்தல் போன்ற ஆபத்துகள் பிள்ளைகளை பாதிக்கக்கூடும் என்பதே இதன் முக்கிய காரணமாக உள்ளது. அரசு அறிக்கைகளின் படி, எகிப்தில் குழந்தைகளின் பெரும்பாலானர் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துகிறார்கள், அதனால் அவர்களை பாதுகாக்கும் வகையில் கட்டுப்பாடுகள் தேவைப்பட்டுள்ளன என்பதாகும்.

மேலும் இச்சட்டம் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் வயது மற்றும் விதிகளை குறிப்பாக விளக்குகிறது.தொடர்ந்து குழந்தைகள் சரியாக வளர்ந்து, விழிப்புணர்வு பெறும்போது மட்டுமே இந்த தளங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Online Tamil News)
இந்தச் சட்ட முயற்சி உலகின் பிற பகுதிகளிலும் நடைபெறும் சமூக ஊடக கட்டுப்பாடுகளின் போக்கை பிரதிபலிக்கிறது. உதாரணமாக ஆஸ்திரேலியாவில் 16-க்கு குறைவான வயது குழந்தைகள் சமூக ஊடகங்களின் பயன்பாட்டை தடை செய்துள்ளன. மேலும் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளும் இதுபோன்ற கட்டுப்பாடுகளை பரிசீலித்து வருகின்றனர்.


