OpenAI நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேனின் சான் பிரான்சிஸ்கோ இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

. ஏப்ரல் 10-ஆம் தேதி அதிகாலையில் அடையாளம் தெரியாத நபரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. வீட்டின் முன்பக்க வாயில் மீது எரியும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் அங்கு தீ விபத்து ஏற்பட்டது, இருப்பினும் அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது பெரிய அளவிலான சொத்து சேதமோ ஏற்படவில்லை.
சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே துரிதமாகச் செயல்பட்ட சான் பிரான்சிஸ்கோ காவல்துறையினர், 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். விசாரணையில் அந்த நபர் சாம் ஆல்ட்மேனின் வீட்டைத் தாக்குவதற்கு முன்பாக OpenAI நிறுவனத்தின் தலைமையகத்திற்கும் சென்று அச்சுறுத்தல் விடுத்தது தெரியவந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (AI) அசுர வளர்ச்சியால் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்கிற அச்சம் மற்றும் AI-க்கு எதிரான மனநிலை காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை மீண்டும் ஒருமுறை அதிகரித்துள்ளது.(Online Tamil News)


