திமுக – தேமுதிக கூட்டணி இன்று உறுதியானது. இதையடுத்து முதலமைச்சர், துணை முதலமைச்சர், திமுக அமைச்சர்கள், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ், தேமுதிக நிர்வாகிகள் என்று இன்று காலையிலேயே பரபரப்பானது அண்ணா அறிவாலயம்.

சகோதர் கேப்டன் என்று முதலமைச்சரும், அண்ணன் ஸ்டாலின் என்று பிரேமலதா விஜயகாந்தும் தங்களின் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், ’’தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிகவிற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!’’என்று தமிழக பாஜக தலைமை தெரிவித்திருக்கிறது.



