பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் வரலாற்றில் இதுவரை நடைபெறாத ஒரு முக்கிய திருப்பமாக, மன்னர் சார்லஸின் தம்பி ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் (முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ), அவரது 66-வது பிறந்தநாளான பிப்ரவரி 19, 2026 அன்று லண்டன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பாலியல் முறைகேடு புகார்கள் மற்றும் அரசு அலுவலகத்தில் தவறான நடத்தை (Misconduct in public office) போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எப்ஸ்டீனுக்கு அரசின் ரகசிய ஆவணங்களை இளவரசர் ஆண்ட்ரூ பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படும் புதிய ஆதாரங்கள் இந்த கைதுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
நார்போக் பகுதியில் உள்ள ஆண்ட்ரூவின் இல்லத்திற்கு ஆறு காவல் துறை வாகனங்களில் வந்த அதிகாரிகள், சுமார் 11 மணி நேர தீவிர விசாரணைக்குப் பிறகு அவரைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மன்னர் சார்லஸ், தனது சகோதரரின் நிலை குறித்து கவலை வெளியிட்டதோடு, “சட்டம் தனது கடமையைச் செய்யும், இதற்கு அரச குடும்பம் முழு ஒத்துழைப்பு அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.(Online Tamil News)


