• அரசியல்
    அரசியல்Show More
    admk dmk tvk
    தமிழகத்தில் உறுதியாகும் 6 முனை போட்டி
    Mar 26, 2026 at 6:20 pm
    anbumani pmk mango
    அன்புமணிக்குத்தான் மாம்பழம்-நீதிமன்றத்தில் பரபரப்பு!
    Mar 26, 2026 at 4:46 pm
    online-tamil=political-news
    அதிமுகவின் தொகுதி பங்கீடு – வெற்றியா? சவாலா?
    Mar 26, 2026 at 4:41 pm
    poongundran sankaralingam
    ஜெயலலிதாவிடம் பொய் சொல்லி சீட் வாங்கிவிட்டார் – பூங்குன்றன் பரபர
    Mar 26, 2026 at 3:12 pm
    admk election
    மக்களிடம் எடுபடுமா எடப்பாடியின் வாக்குறுதிகள்?
    Mar 25, 2026 at 12:27 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19
    Sahitya Akademi Award 2025
    சர்ச்சைகளுக்குப் பின் அங்கீகாரம்: ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது!
    2026-03-16
    delhi vijay
    விஜய் கடிதம் – சிபிஐ பதில் என்ன?
    2026-03-16

    அண்மைச் செய்திகள்

    admk dmk tvk
    தமிழகத்தில் உறுதியாகும் 6 முனை போட்டி
    2026-03-26
    anbumani pmk mango
    அன்புமணிக்குத்தான் மாம்பழம்-நீதிமன்றத்தில் பரபரப்பு!
    2026-03-26
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    2026-03-26
    online-tamil=political-news
    அதிமுகவின் தொகுதி பங்கீடு – வெற்றியா? சவாலா?
    2026-03-26
  • இந்தியா
    இந்தியாShow More
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
    ONLINE-TAMIL-NEWS
    ஒரு மாம்பழம் இவ்வளவு விலையா..? இந்தியாவில் விளையும் இந்த அரிய வகை மாம்பழம் பற்றி தெரியுமா!
    Mar 19, 2026 at 3:54 pm
    Indore Fire Accident
    சார்ஜ் செய்தபோது வெடித்த மின்சார கார் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு
    Mar 18, 2026 at 3:10 pm
    Kavadiyar Palace theft
    திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை!
    Mar 17, 2026 at 4:30 pm
  • உலகம்
    Trump 15 point plan Iran
    உலகம்
    ஈரான் போரை முடிக்க டிரம்ப்பின் 15 அம்சத் திட்டம்!
    2026-03-25
    Israel attack on Iran
    உலகம்
    ரஷியா- ஈரான் இடையிலான ஆயுத விநியோகப் பாதையைத் தாக்கிய இஸ்ரேல்!
    2026-03-25
    Texas refinery fire,
    உலகம்
    வலேரோ சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: ஒரு நாளிற்கு 4.35 லட்சம் பேரல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
    2026-03-24
    ColombiaPlaneCrash
    உலகம்
    கொலம்பியாவில் ராணுவ விமானம் விழுந்து விபத்து: 66 பேர் உயிரிழப்பு!
    2026-03-24
    Bangladesh-India-Seven sisters-Attack-Indian-High Commission
    உலகம்
    வங்கதேசத்திற்கும் இந்தியாவிற்கும் என்னதான் பிரச்சனை ?
    2025-12-18
    Malaysia LGBT controversy, work stress and sexuality,Online Tamil News
    உலகம்
    வேலை அழுத்தத்தால் ஓரினச் சேர்க்கை – மலேசிய அமைச்சர் சர்ச்சை கருத்து !
    2026-01-29
    Bermuda-Triangle-Atlantic-Ocean-mystery-revealed-by-scientists-sciencenews-worldnews
    உலகம்
    பெர்முடா முக்கோணம்: மர்மங்களுக்குள் மறைந்த பூமியின் வரலாறு..!
    2025-12-15
    Thailand Election 2026
    உலகம்
    2026 தேர்தல் – திணறும் தாய்லாந்து!
    2026-02-10
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தலையங்கம்: காவலும் நீதியும்
Share
28°C
Chennai
few clouds
29° _ 28°
74%
3 km/h
Thu
28 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
Custodial Violence,
தலையங்கம்

தலையங்கம்: காவலும் நீதியும்

Last updated: 2026-03-24 10:10 am
Spark Desk 21 Views
Share
SHARE

கொரோனா எனும் கொடூரத்தில் உலகமே உறைந்து போயிருந்த 2020ஆம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த அப்பா-மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் லாக்டவுன் கால விதிமுறைகளைக் காட்டி போலீசார் காவல்நிலையத்திற்கு வரச் செய்தனர். அதன்பிறகு அவர்கள் பிணமாகத்தான் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரவு நேரத்தில் தந்தையையும் மகனையும் போலீசார் அடித்து துன்புறுத்தி, அதன்பிறகு சிறைக்கு அனுப்ப முயன்ற நிலையில், ரத்தம் சொட்டச் சொட்ட இருவரும் உயிருக்குப் போராடினர். அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சரியான சிகிச்சைக்கு கூட கொண்டு செல்ல முடியாத நிலையில், அடுத்தடுத்த நாட்கள் தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.

லாக்கப் டெத் எனப்படும் காவல் சித்திரவதையில் நேர்ந்த இந்த இரட்டைக் கொலை தமிழ்நாட்டையே அதிர வைத்தது. அப்பாவையும் மகனையும் ஸ்டேஷனில் வைத்து அடித்த போலீசார், அது தொடர்பான தடயங்களை அழிக்க முயற்சி செய்தது அம்பலமானது. நீதிமன்ற உத்தரவுப்படி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் சாத்தான்குளம் காவல்நிலையத்திலும், கொல்லப்பட்டவர்களின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தினார். போலீஸ் அதிகாரிகளுக்கு பயந்து காவல்துறை தரப்பில் பலரும் பேசவே தயங்கிய நிலையில், பெண் காவலர் ரேவதி நடந்த உண்மைகளை மாஜிஸ்டிரேட்டிடம் கூறினார். காவல்நிலையத்தில் நடந்த தாக்குதலால்தான் மரணம் நிகழ்நந்திருக்கிறது என்று எல்லாருக்கும் வெட்டவெளிச்சமான நிலையில், அப்போது ஆட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு இந்தக் காவல் படுகொலைகளை மறைப்பதற்கு பெரும் பாடுபட்டது.

அப்பாவும் மகனும் நெஞ்சுவலியாலும் கடுமையானக் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலாலும் இறந்துவிட்டார்கள் என்று முதலமைச்சராக இருந்த பழனிசாமியும் அவருடைய அமைச்சர்களும் பேட்டி அளித்தார்கள். முதலமைச்சரின் நேரடிப் பொறுப்பில் இருந்த காவல்துறையில் நடந்த லாக்கப் கொலைகளுக்கு காரணமான போலீஸ் அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்கு அ.தி.மு.க. அரசு சட்டத்திற்கு புறம்பான பல முயற்சிகளை எடுத்தது. தி.முக. .உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், உள்ளூர் அமைப்பினரும் அ.தி.மு.க. அரசின் போக்கைக் கண்டித்து கண்டனங்களை எழுப்பியும், போராட்டங்களை நடத்தியும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் வலியுறுத்தியதன் விளைவாக, எடப்பாடி பழனிசாமி அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது.

சாத்தான்குளத்தில் சட்டத்தைத் தன் கைகளில் எடுத்து அப்பாவையும் மகனையும் அடித்துக் கொன்ற போலீஸ் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோரும் 2 காவலர்களும் கைது செய்யப்பட்டனர். கையில் சிக்கியிருக்கும் அப்பாவையும் மகனயும் அடித்துப் பழகும்படி இவர்களிடம் சொல்லி தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன். சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார், இந்தக் கொடூர நிகழ்வுக்கு முன்பும் காவல் நிலையத்தில் பலரை சித்திரவதை செய்த விவரமும் தெரியவந்தது. அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரை புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் ஜெயராஜ்-பென்னிக்ஸ் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

சி.பி.ஐ. விசாரணையில் சாத்தான்குளம் போலீசார் கம்பு, கத்தி போன்றவற்றால் பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரையும் கடுமையாகத் தாக்கியிருப்பது தெரியவந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையிலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிப்பட்டன. அவற்றை தீர்ப்பின் போது மாஜிஸ்ட்ரேட் முத்துக்குமரன் விரிவாக வாதித்தபோது அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியால் உறைந்தனர். ஏறத்தாழ 6 ஆண்டுகாலம் நடந்த வழக்கில் நீதிபதி முத்துக்குமரன் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தந்தை ஜெயராஜையும் மகன் பென்னிக்ஸையும் அடித்துக் கொன்ற வழக்கில் தொடர்பபுடைய 9 போலீசாரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தார் நீதிபதி முத்துக்குமரன். இந்தத் தீர்ப்பு நீதியின் மீதான நம்பிக்கையை நிலைநாட்டியுள்ளது. அதே நேரத்தில், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்பது காவல்துறை நடவடிக்கைகளில் முற்றிலும் பொருத்தமாக உள்ளது.

தி.மு.க ஆட்சியிலும் காவல்துறையினரின் மோசமான நடவடிக்கைகளால் காவல் மரணங்கள் ஏற்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே சிவகங்கை மாவட்ட இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் போனில் வருத்தம் தெரிவித்ததை தமிழ்நாடு பார்த்தது. அ.தி.மு.க. ஆட்சியைப் போல, சட்டத்தைக் கையில் எடுத்த போலீசாரை பாதுகாக்க தி.மு.க. ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கவில்லை. துறை ரீதியான நடவடிக்கைகளுக்கும் சட்டப்பூர்வமான விசாரணைகளுக்கும் அவர் உத்தரவிட்டது நம்பிக்கையை உருவாக்கியது. எனினும், காவல்துறையின் தொடர்ச்சியான வன்முறைப் போக்கிற்கு இது மட்டும் தீர்வாகிவிடாது.

மற்ற குற்றங்களைவிட, காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு உருவாக்கும் மரணங்களுக்கும், அத்துமீறல்களுக்கும் விரைவான விசாரணையும் கடுமையான தண்டனையும் அளிக்கப்பட்டால்தான் காவல்நிலையக் கொலைகள் முடிவுக்கு வரும்.(Online Tamil News)

TAGGED:CBI InvestigationCustodial ViolenceHuman RightsIndian Law EnforcementJustice SystemLockup Deathsonline tamil newsPolice AccountabilityPolice Brutality IndiaSathankulam CaseTamil Nadu Politicstamil news today
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article 24 march 2026 horoscope இன்றைய ராசிப்பலன்- 24.03.2026
Next Article ColombiaPlaneCrash கொலம்பியாவில் ராணுவ விமானம் விழுந்து விபத்து: 66 பேர் உயிரிழப்பு!

உலகம்

Trump 15 point plan Iran
ஈரான் போரை முடிக்க டிரம்ப்பின் 15 அம்சத் திட்டம்!
உலகம் Mar 25, 2026 at 3:19 pm
Israel attack on Iran
ரஷியா- ஈரான் இடையிலான ஆயுத விநியோகப் பாதையைத் தாக்கிய இஸ்ரேல்!
உலகம் Mar 25, 2026 at 1:22 pm
Texas refinery fire,
வலேரோ சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து: ஒரு நாளிற்கு 4.35 லட்சம் பேரல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!
உலகம் Mar 24, 2026 at 3:51 pm
ColombiaPlaneCrash
கொலம்பியாவில் ராணுவ விமானம் விழுந்து விபத்து: 66 பேர் உயிரிழப்பு!
உலகம் Mar 24, 2026 at 12:10 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்

அண்மைச் செய்திகள்

admk dmk tvk
தமிழகத்தில் உறுதியாகும் 6 முனை போட்டி
Mar 26, 2026 at 6:20 pm
Andhra Pradesh accident
ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
Mar 26, 2026 at 5:04 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?