காஸ்பியன் கடல் பகுதியில் ரஷியா மற்றும் ஈரான் இடையிலான ஆயுத விநியோகப் பாதையை இலக்கு வைத்து இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஆயுத விநியோகச் சங்கிலியை உடைப்பதே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரானின் முக்கியத் துறைமுகமான பந்தர் அன்சாலியில் உள்ள போர்க்கப்பல்கள், கடற்படை கட்டளை மையம் மற்றும் கப்பல் கட்டும் தளம் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் பல கப்பல்கள் சேதமடைந்துள்ளன.

உக்ரைன் போருக்காக ஈரானிடமிருந்து ரஷியாவிற்கு அனுப்பப்படும் டிரோன்கள் மற்றும் வெடிமருந்துகள் இந்தத் துறைமுகம் வழியாகவே கொண்டு செல்லப்படுவதால் இந்த விநியோகப் பாதையை இஸ்ரேல் தற்போது முடக்கியுள்ளது.

இதுவரை அமைதியாக இருந்த காஸ்பியன் கடல் பகுதியில் இப்போது போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதை ரஷியா கடுமையாகக் கண்டித்துள்ளதுடன் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை போரை மேலும் விரிவுபடுத்தும் என்றும் எச்சரித்துள்ளது.(Online Tamil News)


