நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் பல வருடங்களாக விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அங்கு பெரும்பான்மையாக வசிக்கும் பலுச் இன மக்களின் ஆயுதக் குழு பி.எல்.ஏ. (Balochistan Liberation Army), அரசு கட்டுப்பாட்டுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நடாத்தி வருகிறது. இந்நிலையில், பி.எல்.ஏ. வீரர்கள் பலுசிஸ்தானில் மீண்டும் புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ளனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தில் (BLA) அமைப்பு “Operation Herof Phase II” என்ற பெயரில் 40 மணி நேரம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் புலிகள் வெடிக் குண்டுகளை உபயோகித்து பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு பெரிய சேதம் செய்தனர். இதனைத்தொடர்ந்து BLA வெளியிட்ட அறிக்கைகளின் படி, பாகிஸ்தான் படைகள், போலீஸ் மற்றும் Frontier Corps உட்பட 200க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டதாக கூறியுள்ளது.(Online Tamil News)

முன்னதாக, பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் சில பெண்கள் தற்கொலைபோர்கள் (“Fidayeens”) ஆக பங்கேற்று வெடிக் குண்டுகள் மற்றும் IED பயன்படுத்தி ராணுவத்திற்கும் பாதுகாப்பு படைகளுக்கும் பெரும் சேதம் செய்தனர்.

BLA அமைப்பின் வெளியீட்டின் படி, Asifa Mengal என்ற பெண் Inter-Services Intelligence (ISI) தலைமையகம் இருக்கும் நொஷ்கி இடத்தில் வாகனத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு (VBIED) தாக்குதலை செயல்படுத்தினார். அதேபோல், Hawa Baloch என்ற பெண்ணும் BLA அமைப்பு மூலம் தாக்குதலை நடத்தியுள்ளார்.இந்த தாக்குதலில் BLA அமைப்பை சேர்ந்த 18 பேரும், மேலும் 11 பெண்கள் Fidayeens ஆக பங்கேற்று உயிரிழந்தனர் என்றும் BLA அமைப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்தின் பதில்
இதற்கிடையில், இந்த தாக்குதல்களில் அரசுப் படைகளுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டதாக கூறப்படும் தகவல்களை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. தாக்குதலை தடுக்க ராணுவம் மற்றும் போலீஸ் இணைந்து கடுமையான எதிர்தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 145 பி.எல்.ஏ. உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இருதரப்புகளுக்கும் இடையே நடந்த மோதல்களில் பொதுமக்களில் ஐந்து பெண்கள், மூன்று குழந்தைகள் உட்பட 31 பேர், அதே நேரத்தில் பாதுகாப்புப் படைகளின் 17 வீரர்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.


