ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. டெல் அவிவ் நகரில் உள்ள பிரதமரின் அலுவலகம் மற்றும் இஸ்ரேலிய விமானப்படைத் தளபதியின் இருப்பிடத்தைக் குறிவைத்து ‘கெய்பர் ஷெகன்’ (Kheybar Shekan) வகை பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இந்த “10-வது அலை” தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

இந்தத் தாக்குதல் நடந்த சமயத்தில் பிரதமர் நெதன்யாகு அலுவலகத்தில் இருந்தாரா என்பது குறித்தோ அல்லது அவரது தற்போதைய நிலை குறித்தோ அதிகாரப்பூர்வத் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ஈரான் ஊடகங்கள் அவரது நிலை “தெளிவற்றதாக” இருப்பதாகத் தெரிவித்து வரும் நிலையில், இஸ்ரேல் அரசு அல்லது அந்நாட்டு ராணுவம் இந்தத் தாக்குதல் குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.(Online Tamil News)


