சன் டிவியில் மிகவும் பிரபலமான ‘கயல்’ தொடரில் நடித்து வந்த நடிகை சுபாஷினி, சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், கடந்த 2024-ம் ஆண்டு பிப்பின் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் பெங்களூரில் பணியாற்றி வரும் நிலையில், சுபாஷினி நடிப்பிற்காகச் சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில், இவர் நேற்று இரவு தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

அந்த உரையாடலின் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் வாக்குவாதம் காரணமாக, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுபாஷினி, கணவர் நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போரூர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று சுபாஷினியின் உடலை மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்காக உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.மேலும் இதுகுறித்து, குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.(Online Tamil News)


