எரிமலைகளுக்குள்(Volcanoes), பூமியின் உட்புறத்திலிருந்து வரும் அதிக வெப்பம் (Globalwarming) மற்றும் அழுத்தத்தால் உருகிய பாறைகள் (மாக்மா), சாம்பல் மற்றும் வாயுக்கள் மாக்மா அறைக்குள் குவிந்து, இறுதியாக மேற்பரப்பில் உள்ள விரிசல்கள் வழியாக வெளியேற்றப்படுகின்றன; இப்போது அதிக எரிமலை வெடிப்புகள் நிகழ்வதற்குக் காரணம், டெக்டோனிக் தட்டுகள் நகரும் பகுதிகள் (“Ring of Fire ) அல்லது “ஹாட் ஸ்பாட்ஸ்” (hot spots) காரணமாக ஏற்படும் தொடர்ச்சியான அழுத்தம் அதிகரிப்பதே ஆகும், இது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிகரித்து எதிர்பாராத நேரத்தில் பேரழிவை ஏற்படுத்துகிறது.

எரிமலைகள் பற்றிய நமது புரிதல் தவறு
அடுத்த பெரிய உலகளாவிய எரிமலைப் பேரழிவு, எட்ட்னா (இத்தாலி) அல்லது யெல்லோஸ்டோன் (அமெரிக்கா) போன்ற பிரபலமான எரிமலைகளிலிருந்து அல்ல; வெளிப்படையாக அமைதியாகத் தெரியும், மிகக் குறைவு கண்காணிப்பு உள்ள, “மறைந்த” எரிமலைகளிலிருந்தே வருவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த குறைவாக அறியப்பட்ட எரிமலைகள் நாம் கணித்து வைத்துள்ளதைவிட அடிக்கடி வெடிக்கின்றன. பசிபிக், தென் அமெரிக்கா, இந்தோனேசியா போன்ற பகுதிகளில், வரலாற்றில் எந்தப் பதிவும் இல்லாத எரிமலைகள் ஒவ்வொரு ஏழு முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வெடிப்பது வழக்கமானது. அவை ஏற்படுத்தும் விளைவுகள் சில சமயம் எதிர்பாராத அளவுக்கு அதிகமாக இருக்கும்.
2025-இல் நடந்த ஹெய்லி குப்பி (Hayli Gubbi), எத்தியோப்பியா — 12,000 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெடிப்பு
அதேபோல், 2025 நவம்பரில் எத்தியோப்பியாவின் ஹெய்லி குப்பி எரிமலை பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் முதல் முறையாக வெடித்தது. இந்த வெடிப்பு 8.5 மைல் உயரத்திற்கு சாம்பல் மேகங்களை அனுப்பியது. சாம்பல் யேமனில் விழுந்ததுடன், வட இந்தியாவின் வான்வெளியிலும் பரவியது.
இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பும் நடந்துள்ளது. 1982-இல், பல நூற்றாண்டுகளாக அமைதியாக இருந்த மெக்சிகோவின் எல் சிச்சோன் (El Chichón) எரிமலை திடீரென மிகப் பெரிய வெடிப்புடன் செயல்பட்டது. கண்காணிப்பு இல்லை, எச்சரிக்கை இல்லை. இதனால் அதிகாரிகள் முற்றிலும் ஆயத்தமின்றி சிக்கினர்.
அந்த வெடிப்பில் சூடான கற்கள், சாம்பல், வாயுக்கள் சேர்ந்து ஏற்பட்ட பேரலைகள் பெரிய காட்டுப் பகுதிகளை அழித்தன. நதிகள் அடைத்து போனது, கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, சாம்பல் குவாத்தமாலா வரை பறந்தது. 2,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்; 20,000 பேர் இடம்பெயர்ந்தனர். இது மெக்சிகோவின் நவீன வரலாற்றில் மிக மோசமான எரிமலை பேரழிவு.
இந்த பேரழிவு மெக்சிகோவிலேயே முடிந்துவிட்டதில்லை. வெடிப்பில் வெளிவந்த சல்பர் வளிமண்டலத்தின் மேல் பகுதிக்கு சென்று, சூரிய ஒளியைத் தடுக்கக்கூடிய துகள்களாக மாறியது. இதனால் வடக்கு அரைக்கோளத்தில் வெப்பநிலை குறைந்தது, ஆப்பிரிக்காவின் பருவமழை தெற்கே நகர்ந்தது, இதனால் அங்கு கடுமையான வறட்சி ஏற்பட்டது.
பொதுவாக இதுவே ஒரு பிராந்தியத்தின் சக்தியையும் தாங்கும் திறனையும் சோதிக்கும் அளவுக்கு போகும். ஆனால் அப்போது எத்தியோப்பியா ஏற்கனவே வறுமை, உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து 1983–85 எத்தியோப்பியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட பேரிடர் பட்டினி சுமார் 10 இலட்சம் உயிர்களை காவு கொண்டது. இந்த நிகழ்வு உலகளாவிய கவனத்தை ஈர்த்தது; லைவ் எய்ட் (Live Aid) போன்ற மனிதாபிமான இயக்கங்கள் உருவானது.
ஆச்சரியம் என்னவென்றால், இந்த மிகப்பெரிய பேரழிவில் ஒரு அறியப்படாத எரிமலையே முக்கிய பங்காற்றியது என்பதை கூட பல பூமியியல் விஞ்ஞானிகள் அறியவில்லை.

மறக்கப்பட்ட எரிமலைகளில் முதலீடு குறைவு
இந்த வரலாற்றுப் பாடங்கள் இருந்தும், உலகளாவிய அளவில் எரிமலை ஆய்வுக்கான முதலீடு அதன் ஆபத்துகளுக்கு ஏற்றபடி வளரவில்லை. உலகின் செயலில் உள்ள எரிமலைகளில் பாதியிலும் குறைவாக மட்டுமே முறையான கண்காணிப்பில் உள்ளது. அறிவியல் ஆய்வுகளும் பெரும்பாலும் பிரபலமான சில எரிமலைகளிலேயே கவனம் செலுத்துகின்றன.
உதாரணமாக, மவுண்ட் எட்ட்னா பற்றி வெளியிடப்பட்ட ஆய்வுகள், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வனுவாட்டு ஆகிய நாடுகளில் உள்ள 160 எரிமலைகள் மொத்தத்தையும் விட அதிகம். இவை உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை எரிமலைகள் அருகில் வாழும் பகுதிகள்.
பெரிய எரிமலை வெடிப்புகள் அருகிலுள்ள சமூகங்களை மட்டும் அல்ல, உலகின் காலநிலையையும் பாதிக்கக் கூடியவை. வெப்பநிலையை தற்காலிகமாகக் குறைக்க, பருவமழையை மாற்றி விட, முழு பிராந்தியங்களின் விவசாயத்தையும் பாதிக்க முடியும். வரலாற்றில் இவை பட்டினி, நோய்கள், சமூக கலகம் போன்றவற்றை தூண்டுகின்றன. ஆனால் இனியும் உலகளவில் இத்தகைய ஆபத்துகளை முன்கூட்டியே கணிக்கவும் சமாளிக்கவும் ஒருங்கிணைந்த அமைப்பு இல்லை. இதற்காக Global Volcano Risk Alliance குழு இப்போதுஉருவாக்கப்பட்டுள்ளது.

Global Volcano Risk Alliance என்ற இந்த அமைப்பு விஞ்ஞானிகள், அரசியல் நிர்வாகிகள், மனிதாபிமான அமைப்புகள் ஆகியோருடன் இணைந்து,
- குறைவு கவனிக்கப்பட்ட ஆபத்துகளை வெளிகொண்டு வருவது
- கண்காணிப்பு வசதி குறைவாக உள்ள பகுதிகளில் திறன்களை மேம்படுத்துகிறது
- ஒரு எரிமலை வெடிப்பதற்கு முன்பே சமூகங்களைத் தயார்படுத்துவது
என்பவற்றை செய்கிறார்கள்.
பேரழிவு ஏற்பட்ட பிறகு ஓடி வந்து உதவுவதல்ல, முன்கூட்டியே செயல்படுவதுதான் வருங்கால பேரிடர்களைத் தவிர்க்க சிறந்த வழி.
ஏன் அமைதியான எரிமலைகள் பாதுகாப்பானவை அல்ல?
பல எரிமலைகள் தகுந்த முன்னுரிமை பெறாததற்கு மனித மனநிலைகளே காரணம்.
நார்மல்சி பையஸ் (Normalcy Bias)
நீண்ட காலமாக அமைதியாக இருந்த ஒன்றை மக்கள் இயல்பாகவே பாதுகாப்பானது என்று நினைக்கிறார்கள்.
அவெய்லபிலிட்டி ஹியூரிஸ்டிக் (Availability Heuristic)
மக்கள் தங்கள் நினைவில் உடனே வரும் நிகழ்வுகளின் அடிப்படையில் ஆபத்தை மதிப்பிடுகிறார்கள்.
எ.கா. — 2010 ஐஸ்லாந்து சாம்பல் மேகம்.
அதே சமயம், சமீபத்திய வரலாறு இல்லாத தூரத்திலுள்ள எரிமலைகளை அவர்கள் கவனிப்பதில்லை.
ரெஸ்பான்ஸ் பையஸ் (Response Bias)
பேரழிவு நடந்த பிறகுதான் அதிக முதலீடு செய்கிறோம். 1982 எல் சிச்சோன் வெடிப்புக்குப் பிறகுதான் அந்த எரிமலை கண்காணிக்கப்பட்டது. ஆனால் பெரிய எரிமலை வெடிப்புகளில் மூன்று பங்கில் இரண்டு அமைதியாக இருந்த எரிமலைகளிலிருந்தே வருகிறது.
சரியான முன்னெச்சரிக்கை உயிர்களை காப்பாற்றிய உதாரணங்கள்
- 1991 – பினடுபோ (Philippines)
முன்கூட்டிய எச்சரிக்கையால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். - 2019 – மெராபி (Indonesia)
தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கையால் பெரிய உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. - 2021 – லா சூஃப்ரியேர் (Saint Vincent, Caribbean)
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியாக நடந்ததால் பேரழிவு கட்டுப்படுத்தப்பட்டது.

எதை செய்ய வேண்டும்?
லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, பசிபிக் போன்ற பகுதிகளில் கண்காணிப்பில்லாத எரிமலைகள் அருகில் மில்லியன் கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். வரலாற்றுப் பதிவில்லாத, ஆனால் ஆபத்து மிகுந்த எரிமலைகளே உண்மையான கவலை.
சிறிய அளவிலான முதலீட்டில் கூட கண்காணிப்பு, எச்சரிக்கை அமைப்பு, சமூகத்துக்கு விழிப்புணர்வு என எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்படலாம். அடுத்த மறைந்த எரிமலை உலகளாவிய பேரழிவாக மாறாமல் தவிர்க்க, நாம் இப்போதே எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.



