ஒரு நாள் வெயிலையே தாங்க முடியாமல் அதுவும் இரண்டரை மணி நேர சாலைவலம் மட்டுமே. இதற்கே உடல்நிலை பாதிக்கப்பட்டு விட்டது என்று சொல்லி இன்று கடலூர் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார் விஜய்.
பெரம்பூரில் பிரச்சாரத்தை தொடங்கிய அன்றே வில்லிவாக்கம் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டார். கடந்த 6ம் தேதி அன்று தி.நகரில் பிரச்சாரம் செய்ய அனுமதி அளித்தும் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டார் விஜய்.

கடந்த 7ம் தேதி அன்று சைதாப்பேட்டையில் அனுமதி அளித்தும் பிரச்சாரத்தை ரத்து விட்டார் விஜய். காரைக்குடியில் நேற்று சாலைவலத்திலேயே அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடத்திய விஜய், கடைசியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பிவிட்டார்.
நாளை மறுதினம் கும்மிடிப்பூண்டியில் அனுமதி கிடைத்தும் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார் விஜய். அனுமதி கிடைக்கவில்லை என்று இத்தனை நாளும் பேசி வந்த நிர்வாகிகள் இப்போது ரத்துக்கான காரணங்களை சொல்வதே இல்லை.
தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருக்கும் நிலையில் விஜய் இப்படி செய்வது தவெக வேட்பாளர்களை அயற்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. பனையூரில் என்னதான் நடக்கிறது? என்று ஆத்திரப்பட்டு வருகின்றனர்.



