2026 பிப்ரவரி 17ஆம் தேதி, உலக வானியல் நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் அன்யூலர் (Annular) சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. இந்த கிரகணத்தின் முக்கிய சிறப்பு, சூரியனை முழுவதும் மறைக்காமல், அதன் ஓரங்களில் தீப்பொறி போல ஒளிவட்டம் தோன்றுவது. இதையே பொதுவாக “ரிங் ஆஃப் ஃபயர்” (Ring of Fire) என்று அழைக்கிறார்கள்.
இந்த அபூர்வமான வானியல் நிகழ்வு அண்டார்டிகா மற்றும் தென் அரைகோளத்தின் சில பகுதிகளில் மட்டுமே தென்படும். இதனால், இந்தியாவில் இருந்து இந்த கிரகணத்தை காண முடியுமா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.
பிப்ரவரி 17, 2026 அன்று என்ன நிகழ்கிறது?
அன்யூலர் சூரிய கிரகணம் என்பது, சந்திரன் பூமியிலிருந்து மிகத் தூரத்தில் (Apogee) இருக்கும் போது, அது சூரியனின் முன் கடந்து செல்லும் நிகழ்வாகும். அப்போது சந்திரன் சூரியனை முழுவதுமாக மூடாது. அதன் மையப் பகுதியின் சுமார் 96% மட்டும் மறைக்கப்படும். இதனால் சூரியனின் வெளிப்புற ஓரம் வட்டமாக ஒளிரும்.
இந்த ஒளிரும் வளையமே ‘ரிங் ஆஃப் ஃபயர்’ என அழைக்கப்படுகிறது. இந்த கிரகணம் UTC நேரப்படி காலை 7:01 மணிக்கு தொடங்கும். அதிகபட்ச நிலை அண்டார்டிகாவில் காணப்படும். முழு அன்யூலர் நிலை 2 நிமிடம் 20 விநாடிகள் வரை நீடிக்கும்.
இந்த நேரத்தில் கூட, சூரியனை நேரடியாக பார்க்க பாதுகாப்பு கண்ணாடிகள் அவசியம். கண்களால் நேரடியாக பார்க்குவது மிகவும் ஆபத்தானது.
யாருக்கு ‘ரிங் ஆஃப் ஃபயர்’ காண வாய்ப்பு?
இந்த கிரகணத்தின் முழு வளைய வடிவம் காணப்படும் பாதை மிகவும் குறுகலானது. சுமார் 759 கிலோமீட்டர் அகலத்தில், பெரும்பாலும் அண்டார்டிகாவின் பனிப் பரப்புகளில் தான் அது செல்லும்.
இந்த பாதையில் இரண்டு முக்கிய ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன:
- கான்கோர்டியா நிலையம் (Concordia Station) – ஐரோப்பிய நாடுகள் இணைந்து நடத்தும் நிலையம். உலகின் மிகவும் தனிமையான இடங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. கோடைகாலத்தில் சுமார் 80 பேர் இங்கு தங்குவர்.
- மிர்னி நிலையம் (Mirny Station) – ரஷ்யா நிர்வகிக்கும் நிலையம். பருவ காலத்தைப் பொறுத்து 50 முதல் 200 பேர் வரை இங்கு தங்குவர்.
இந்த இரு நிலையங்களிலும் இருப்பவர்கள் முழுமையான ‘ரிங் ஆஃப் ஃபயர்’ காட்சியை காண முடியும்.(Online Tamil News)
இதற்கு அப்பால்,
- தெற்கு சிலி, அர்ஜென்டினா பகுதிகளில் பகுதி கிரகணம் (Partial Eclipse)
- தென் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் சூரிய உதயத்திற்குப் பின் சிறிது நேரம் பகுதி கிரகணம் காணப்படும்.

இந்தியாவில் இந்த கிரகணம் தெரிகிறதா?
இல்லை. இந்த கிரகணத்தின் பாதை முழுவதும் பூமியின் தென் அரைகோளத்தில் இருப்பதால், இந்தியாவிலும், வட அமெரிக்காவிலும் இந்த கிரகணத்தை காண முடியாது. இந்தியாவில் அந்த நாளில் வானில் எந்த மாற்றமும் தெரியாது.
ஆனால், வானியல் நிகழ்வுகள் பெரும்பாலும் தொடர்ச்சியாக நடைபெறும். இந்த சூரிய கிரகணத்துக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஒரு முழு சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. அந்த சந்திர கிரகணம் வட அமெரிக்காவில் தெளிவாக காணப்படும்.
கலாச்சார முக்கியத்துவம்
பிப்ரவரி 17ஆம் தேதி வரும் அமாவாசை, பல கலாச்சாரங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.
- சீன நாட்காட்டியில், இது ‘Fire Horse’ ஆண்டின் புத்தாண்டு தொடக்கமாகக் கருதப்படுகிறது.
- பிப்ரவரி 18 அன்று சந்திர பிறை தென்பட்டால், ரமலான் மாதம் தொடங்கும் வாய்ப்பும் உள்ளது.
எதிர்கால ‘ரிங் ஆஃப் ஃபயர்’ கிரகணங்கள்
2026க்கு பின் பல அன்யூலர் சூரிய கிரகணங்கள் வரவிருக்கின்றன:
- 6 பிப்ரவரி 2027 – தென் அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா
- 26 ஜனவரி 2028 – எக்வடார், பெரு, ஸ்பெயின்
- 1 ஜூன் 2030 – வட ஆப்பிரிக்கா, ஆசியாவின் சில பகுதிகள்
அப்போது இந்தியாவுக்கு அருகிலான பகுதிகளிலும் இந்த அபூர்வ காட்சி தெரியும் வாய்ப்பு உள்ளது.



