மேற்கு வங்க மாநிலத்திற்கு வரும் ஏப்ரல் 23 மறும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரங்களில் தொடர்ந்து மீன் மற்றும் இறைச்சியை முன் வைத்து பேசி வருகிறார் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
அதாவது பாஜக ஆட்சிக்கு வந்தால் கறி, மீன், முட்டை, இறைச்சியை சாப்பிட முடியாது. பாஜக ஆளும் மாநிலங்களில் மீன் சாப்பிடப்படுவதில்லை. மக்கள் மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டி ஆட்சியை பிடிக்கிறது பாஜக. என்று பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார் மம்தா பானர்ஜி.

மம்தாவின் இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது பாஜக. வங்காளத்தில் மீன், இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாஜக ஆலோசனை செய்யவும் இல்லை. வங்காளிகள் மீன் மீது மிகுந்த பிரியம் கொண்டவர்கள். அதை தடுக்கும் எந்த முடிவையும் பாஜக எடுக்கவில்லை. மாட்டிறைச்சியை வெளிப்படையாக விற்பனை செய்யக்கூடாது என்பது மட்டுமே பாஜகவின் நிலைப்பாடு. திறந்த வெளி இறைச்சி விற்பனையை ஒழுங்குபடுத்தச் சொல்லி பீகார் அரசு அண்மையில் அறிவித்தது. இதன் பின்னரே இது மாதிரியான சர்ச்சை எழுந்திருக்கிறது.



