• அரசியல்
    அரசியல்Show More
    vijaya
    20 ஆண்டுகளுக்கு பின் கைகூடுமா அந்த வெற்றி? எதிர்பார்ப்பில் பிரேமலதா
    Mar 28, 2026 at 7:10 pm
    tamilkumaran
    திமுக கூட்டணியில் ஜி.கே. மணி மகன்
    Mar 28, 2026 at 4:23 pm
    sundar c
    மதுரை மக்களே இதோ அவர் வருகிறார்… சுந்தர் சியை களமிறக்கும் குஷ்பு
    Mar 28, 2026 at 12:14 pm
    admk
    அதிமுகவில் 42 புதுமுகங்கள்!
    Mar 27, 2026 at 5:12 pm
    leema
    ஆதவ் அர்ஜூனாவின் மாமியார் லீமா லால்குடியில் போட்டி!
    Mar 27, 2026 at 3:34 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    vijay ponraj
    விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் மன்னிப்பு கேட்க தயார்-பொன்ராஜ் 
    2026-03-27
    saathankulam
    ஐநாவை உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம் – குற்ற பின்னணி என்ன?
    2026-03-23
    Karur rally stampede 2025
    விஜய்யின் வாகனம் கூட்டத்திற்குள் சென்றதே கரூர் விபத்துக்குக் காரணம்? – சிபிஐ சந்தேகம்
    2026-03-19
    Sahitya Akademi Award 2025
    சர்ச்சைகளுக்குப் பின் அங்கீகாரம்: ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது!
    2026-03-16

    அண்மைச் செய்திகள்

    vijaya
    20 ஆண்டுகளுக்கு பின் கைகூடுமா அந்த வெற்றி? எதிர்பார்ப்பில் பிரேமலதா
    2026-03-28
    daughter kills father
    காதலுக்காக தந்தையை கொலை செய்த மகள்- Breakup செய்ததால் போட்டுக் கொடுத்த காதலன்!
    2026-03-28
    online-tamil-news
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    ONLINE-TAMIL-NEWS
    70 மில்லியன் ஆண்டுகள் மறைந்திருந்த டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு!
    2026-03-28
  • இந்தியா
    இந்தியாShow More
    online-tamil-news
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு காரணம் என்ன?
    Mar 27, 2026 at 11:35 am
    Andhra Pradesh accident
    ஆந்திரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
    Mar 26, 2026 at 5:04 pm
    India medicine shortage 2026
    போர் எதிரொலி: இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு மற்றும் விலை உயரும் அபாயம்!
    Mar 25, 2026 at 6:22 pm
    ONLINE-TAMIL-NEWS
    ஒரு மாம்பழம் இவ்வளவு விலையா..? இந்தியாவில் விளையும் இந்த அரிய வகை மாம்பழம் பற்றி தெரியுமா!
    Mar 19, 2026 at 3:54 pm
    Indore Fire Accident
    சார்ஜ் செய்தபோது வெடித்த மின்சார கார் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு
    Mar 18, 2026 at 3:10 pm
  • உலகம்
    online-tamil-news
    உலகம்
    உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
    2026-03-28
    Trump war pause,
    உலகம்
    10 நாட்களுக்கு போர் ஒத்திவைப்பு – ட்ரம்ப் திட்டமிட்டுள்ளது என்ன?
    2026-03-28
    online-tamil-news
    உலகம்
    திருநங்கைகளுக்கு ஒலிம்பிக்கில் தடை – நடந்தது என்ன?
    2026-03-27
    Donald Trump signature dollar
    உலகம்
    அமெரிக்க டாலரில் Donald Trump கையொப்பம் – 165 ஆண்டு பழக்கத்தில் மாற்றம்!
    2026-03-27
    nasa moon
    உலகம்
    திரும்பும் சரித்திரம்! நிலவுக்குச் செல்லும் முதல் பெண்!
    2026-02-03
    Pakistan retaliatory attack
    உலகம்
    ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் பதில் தாக்குதல் -133 பேர் உயிரிழப்பு
    2026-02-27
    Online Tamil News
    உலகம்
    நோபல் பரிசு வென்ற நர்கீஸ் முகமதிக்கு 7.5 ஆண்டுகள் சிறை : காரணம் என்ன?
    2026-02-09
    Singapore-US- richest countries-World Atlas-Liechtenstein-Singapore-America
    உலகம்
    அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது சிங்கப்பூர்…உலகின் டாப் 10 பணக்கார நாடுகள் இதோ !
    2025-12-30
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Edappadi Palaniswami
    தலையங்கம் : அச்சமா? வியூகமா?
    Mar 26, 2026 at 11:19 am
    Custodial Violence,
    தலையங்கம்: காவலும் நீதியும்
    Mar 24, 2026 at 10:09 am
    Tamil literature and politics
    தலையங்கம்: இலக்கிய அரசியல்
    Mar 23, 2026 at 10:21 am
    karurr
    தலையங்கம் : இதுவா ஜனநாயகம்?
    Mar 20, 2026 at 10:57 am
    Iran vs Israel war reasons
    தலையங்கம்: போர் வெறியிடையே வாழ்க்கை
    Mar 18, 2026 at 10:16 am
Reading: தலையங்கம்: கச்சத்தீவு-மீண்டும் மீண்டுமா?
Share
28°C
Chennai
few clouds
29° _ 28°
81%
3 km/h
Sat
28 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம்: கச்சத்தீவு-மீண்டும் மீண்டுமா?

Spark Web Desk
Last updated: 2025-04-05 11:27 am
Spark Web Desk Spark Web Desk 268 Views
Share
katchatheevu
katchatheevu
SHARE

தமிழ்நாட்டு அரசியலில் அடிக்கடி அடிபடும் பெயர் கச்சத்தீவு. ஒரு கட்சியின் மீது இன்னொரு கட்சி குற்றம்சாட்டுவதற்கும், தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் பெயர் இது. 1.15 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட ஆட்கள் யாருமில்லாத தீவாகும். இராமநாதபுரம் சமஸ்தானத்திடம் இருந்த இந்தத் தீவு, 1974ல் இலங்கை அரசிடம் இந்திய அரசால் ஒப்படைக்கப்பட்டது. அதுதான் இப்போது வரை அரசியல் சர்ச்சையாக அடிக்கடி வெளிப்படுகிறது.

1974ல் இந்திய பிரதமராக இருந்தவர் இந்திராகாந்தி. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. இந்திராகாந்தியின் காங்கிரஸ் கட்சியும், கலைஞர் கருணாநிதி தலைமை வகித்த தி.மு.க.வும் தற்போது ஒரே கூட்டணியில் உள்ள நிலையில், கச்சத்தீவை தாரை வார்த்தது தி.மு.க.தான் என மீண்டும் ஒரே கூட்டணியாகப் போகும் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் குற்றம்சாட்டுகின்றன. இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவு அடிப்படையிலான முடிவை எடுக்கக்கூடிய அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது. எனவே, கச்சத்தீவை இலங்கைக்கு தருவதாக முடிவெடுத்தது இந்திராகாந்தி தலைமையிலான மத்திய அரசுதான். அதற்கு, கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசும், தி.மு.க.வும் எதிர்ப்புத் தெரிவித்தன.

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இதற்கு எதிரான கருத்துகள் வைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு, கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன்விளைவாக, இலங்கையிடம் கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டாலும், அந்தப் பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடிக்கலாம் என்ற உரிமை நிலைநாட்டப்பட்டது. இது ஓரளவு சமாதானமாக இருந்தாலும், அந்த உரிமையும்கூட 1976ல் எமர்ஜென்சி காலத்தில் பறிபோய்விட்டது. கச்சத்தீவு முழுக்க முழுக்க இலங்கைக்கு சொந்தமானது.

1977 முதல் இலங்கையில் இன விடுதலைப் போராட்டம் ஆயுதபாணியில் தொடங்கிய நிலையில், இலங்கை ராணுவம் ஈழத்தமிழர்களை மட்டுமின்றி, அவர்களுக்கு உதவுகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தமிழ்நாட்டு மீனவர்களையும் தாக்கத் தொடங்கியது. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லவும் இலங்கை கடற்படை தயங்கவில்லை. ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் தொடர் தாக்குதல்களுக்குள்ளாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இதுவரை இறந்துள்ளனர். இத்தகைய பிரச்சினைகள் வரும்போதெல்லாம் கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்க்க தி.மு.க துணை போனது என்று அ.தி.மு.க. குற்றம்சாட்டும். அதனுடன் கூட்டு சேர்ந்து நிற்பவர்களும் அதையே சொல்வார்கள்.

கச்சத்தீவை மீட்பேன் என 1991ல் கோட்டையில் முதன்முதலாகக் கொடியேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா சபதமிட்டார். பின்னர் வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அ.தி.மு.க.வின் உண்மை நிலை என்னவென்று பார்த்தால், 1974ல் தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்ற தீர்மானத்தில் கையெழுத்திட்டபோது, அதில் கையெழுத்திடாத ஒரே கட்சி அ.தி.மு.க.தான். பின்னர், 1994ல் முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரசிம்மராவுக்கு எழுதிய கடிதத்தில், “கச்சத்தீவு என்ற சிறிய பகுதி தீவு நாடான இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டது என்பது இரு நாட்டு நல்லுறவின் அடிப்படையில்தான்” என்று குறிப்பிட்டிருக்கிறார். பிறகு, 2003ல் பிரதமர் வாஜ்பாய்க்கு முதலமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்திலும், கச்சத்தீவு பகுதியை தமிழக மீனவர்களின் நலனுக்காகக் குத்தகைக்கு பெறலாம். அதே நேரத்தில், கச்சத்தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்திருந்தார். முதன்முதலில் கோட்டையில் கொடியேற்றியபோது, கச்சத்தீவை மீட்பேன் என்று சொன்ன ஜெயலலிதா, கடைசியாக 2016ல் கொடியேற்றும்போதும் அதையேதான் சொன்னார். சொல்லையும் மாற்றவில்லை. தீவை மீட்கவுமில்லை.

2014ல் பிரதமர் வேட்பாளராகத் தமிழ்நாட்டிற்கு பிரச்சாரம் செய்ய வந்த நரேந்திர மோடி, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டு மீனவர்களைப் பாதுகாக்க ஒரு பாதுகாப்பு படை உருவாக்கப்படும். இனி ஒரு மீனவர்கள் மீதும் இலங்கையால் கை வைக்க முடியாது என்றார். தற்போது மோடி பிரதமராக உள்ள நிலையில், 90க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதை வெளியுறவுத்துறை அமைச்சரே தெரிவித்திருக்கிறார். துப்பாக்கிச்சூடும், படகுகள் பறிப்பும் தொடர்கிறது. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது கச்சத்தீவு விவகாரத்தை தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பா.ஜ.க. கிளப்பியதுடன், மோடி அவர்களால் கச்சத்தீவு மீட்கப்படும் என்றும் சொன்னது. ஆனால், இலங்கை அதிபரோ கச்சத்தீவு பற்றி நாங்கள் இதுவரை எதுவும் பேசவில்லை எனச் சொல்லிவிட்டார்.

ஆளில்லா கச்சத்தீவில் ஆளாளுக்கு நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை செல்லும் பிரதமர் என்ன செய்கிறார் என்று அரசியல் வட்டாரம் எதிர்பார்க்கிறது. மீனவர்கள் தங்கள் பிழைப்பைப் பார்க்கப் போய்விட்டார்கள்.

TAGGED:Govt of IndiaIndiakatchatheevuSri Lankatamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article ghibli chat gpt GHIBLI Style – அறிவுசார் சொத்துரிமை யாருக்கு?
Next Article thambidurai டெல்லி திட்டம் என்ன? அடுத்தடுத்து அதிமுக புள்ளிகளுடன் சந்திப்பு ஏன்?

உலகம்

online-tamil-news
உலகின் மிக விலை உயர்ந்த தேன் பற்றி தெரியுமா?
உலகம் Mar 28, 2026 at 5:58 pm
Trump war pause,
10 நாட்களுக்கு போர் ஒத்திவைப்பு – ட்ரம்ப் திட்டமிட்டுள்ளது என்ன?
உலகம் Mar 28, 2026 at 1:16 pm
online-tamil-news
திருநங்கைகளுக்கு ஒலிம்பிக்கில் தடை – நடந்தது என்ன?
உலகம் Mar 27, 2026 at 4:37 pm
Donald Trump signature dollar
அமெரிக்க டாலரில் Donald Trump கையொப்பம் – 165 ஆண்டு பழக்கத்தில் மாற்றம்!
உலகம் Mar 27, 2026 at 12:26 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்

அண்மைச் செய்திகள்

vijaya
20 ஆண்டுகளுக்கு பின் கைகூடுமா அந்த வெற்றி? எதிர்பார்ப்பில் பிரேமலதா
Mar 28, 2026 at 7:10 pm
daughter kills father
காதலுக்காக தந்தையை கொலை செய்த மகள்- Breakup செய்ததால் போட்டுக் கொடுத்த காதலன்!
Mar 28, 2026 at 6:38 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?