• அரசியல்
    அரசியல்Show More
    vijay seeman house
    விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
    May 19, 2026 at 3:45 pm
    seeman naam tamilar
    ”பச்சைமட்டை வைத்தியம் இருக்கு” – விஜய்க்கு ஓட்டு போட்ட மக்களை விளாசிய சீமான்
    May 19, 2026 at 3:26 pm
    vijay seeman
    விஜய்யால் சீமான் எடுத்த 2 அதிரடி முடிவுகள்!
    May 19, 2026 at 3:01 pm
    sp velumani cv shanmugam
    50+ மா.செ.க்கள் ஆதரவு – ஓங்கும் வேலுமணி கை
    May 18, 2026 at 4:18 pm
    semmalai admk
    அதிமுகவிலிருந்து செம்மலை விலகியது ஏன்?
    May 18, 2026 at 10:43 am
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS-POLITICALNEWS
    கோவைச்சிறுவன் படுகொலை – மு.க.ஸ்டாலின் வேதனை
    2026-05-18
    vijay rajmohan
    விஜய் அமைச்சரவையை விமர்சித்த விஷாலுக்கு வலுக்கும் கண்டனம்
    2026-05-18
    keneeshaa
    கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர் 
    2026-05-15
    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08

    அண்மைச் செய்திகள்

    Tamil Horoscope May 16 2026,
    இன்றைய ராசிப்பலன்-16.05.2026
    2026-05-19
    Ebola outbreak,
    எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
    2026-05-19
    vijay seeman house
    விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
    2026-05-19
    seeman naam tamilar
    ”பச்சைமட்டை வைத்தியம் இருக்கு” – விஜய்க்கு ஓட்டு போட்ட மக்களை விளாசிய சீமான்
    2026-05-19
  • இந்தியா
    இந்தியாShow More
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
    Dewas firecracker explosion
    மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
    May 15, 2026 at 6:22 pm
    Heavy Rain,
    உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
    May 14, 2026 at 5:59 pm
    Sanjay Malhotra ,
    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை!
    May 14, 2026 at 5:12 pm
    Uttar Pradesh food poisoning
    வளைகாப்பு விருந்து சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக்குறைவு: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு!
    May 13, 2026 at 4:14 pm
  • உலகம்
    Ebola outbreak,
    உலகம்
    எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
    2026-05-19
    Russia Satan 2 missile,
    உலகம்
    உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
    2026-05-14
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-14
    Colombia plane crash, small plane crash Colombia, Online Tamil News
    உலகம்
    கொலம்பியாவில் விமான விபத்து – 15 பேர் உயிரிழப்பு
    2026-01-29
    King Fahd Causeway ,
    உலகம்
    ஈரான் தாக்குதல் அச்சுறுத்தல்: சவுதி-பஹ்ரைனை இணைக்கும் முக்கிய பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்
    2026-04-07
    India supplies fuel to Sri Lanka
    உலகம்
    இந்தியாவிலேயே தட்டுப்பாடு நிலவும் சூழலில், இலங்கைக்கு 38,000 டன் எரிபொருள் வழங்கிய மத்திய அரசு
    2026-03-30
    El Mencho
    உலகம்
    போதைப்பொருள் மன்னன் ‘எல் மென்சோ’ சுட்டுக்கொலை- மெக்சிகோவில் பதற்றம்!
    2026-02-23
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தலையங்கம்: சாகும் வரை சிறை
Share
38°C
Chennai
overcast clouds
38° _ 37°
52%
8 km/h
Wed
37 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம்: சாகும் வரை சிறை

Last updated: 2025-05-14 5:26 am
Spark Desk 112 Views
Share
All 9 convicts get life sentences for sexual assaults in Pollachi
SHARE

இதுவும் போதாது.. இன்னும் கடுமையான தண்டனை தரவேண்டும் என்று சொன்னால் அது தவறல்ல. அந்தளவுக்கு கொடூரமான பாலியல் வன்கொடுமை செய்தவர்கள்தான், பொள்ளாச்சியில் இளம்பெண்களை வலுக்கட்டாயப்படுத்தி, பாலியல் தொந்தரவு தந்து, அதனை வீடியோ எடுத்து, மீண்டும் மீண்டும் அவர்களை சிதைத்த அரசியல் பின்னணி கொண்ட கூட்டத்தினர். தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே அதிர வைத்த கொடூரமான குற்றம், பொள்ளாச்சி பாலியல் வழக்கு.

அ.தி.மு.க ஆட்சி நடைபெற்ற 2019ஆம் ஆண்டில், அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்த இளைஞர்கள் (இதில் அ.தி.மு.க. நிர்வாகிகளும் உண்டு), அதிகார போதை மற்றும் இதர போதைகளுடன் வெறியேறி, இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, பாலியல் உறவு கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். அதை வீடியோவும் எடுத்து, அதை வைத்து மிரட்டி, தாங்கள் விரும்பும் பொழுதுகளில் இளம்பெண்கள் வந்தாக வேண்டும் என்று ப்ளாக்மெயில் செய்து வந்தனர்.

2019க்கு முன்பே இரண்டாண்டுகளாக இத்தகைய கொடூரங்கள் நிகழ்ந்து வருவது குறித்து, உள்ளூர்வாசிகளுக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும், அ.தி.மு.க. அமைச்சர்களின் செல்வாக்கும் பின்னணியும் இருந்ததால், யாரும் வெளிப்படையாகப் புகார் கொடுக்கவில்லை. இந்த நிலையில்தான், பாதிக்கப்பட்ட இளம்பெண், அந்த காமுகக் கூட்டத்திடமிருந்து தப்பி வந்து தன் குடும்பத்தினரிடம் விவரம் தெரிவித்ததுடன், தன் சகோதரர் உதவியுடன் காவல்துறையில் புகாரும் அளித்தார். அப்போதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சியாளர்களுக்குப் பயந்து பம்மியது.

இதனைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க., மகளிர் அமைப்புகள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க முயற்சித்து, கட்சியினரைக் கைது செய்தது அ.தி.மு.க. அரசு. இளம்பெண்களைப் பாதுகாப்பதற்குப் பதில், குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் முனைப்பாக இருந்தது. “குற்றம் நடந்ததற்கு என்ன ஆதாரம் இருக்கு?” என்று கேட்டார் முதலமைச்சர் பழனிசாமி. புகார் தந்த இளம்பெண்ணின் சகோதரர் தாக்கப்பட்டனர்.

பாலியல் குற்றத்தில் தொடர்புடையவர்கள் அ.தி.மு.க.வில் செல்வாக்குப் படைத்தவர்களாகவும், அ.தி.மு.க. குடும்ப வாரிசுகளின் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்ததால், விசாரணை விரிவடைந்தால் முக்கிய பிரமுகர்கள் தரப்பிலேயே குற்றவாளிகள் சிக்குவார்கள் என்பதால், பொள்ளாச்சி கொடூரத்தை மூடி மறைப்பதில் அ.தி.மு.க அரசு தீவிரவமாக இருந்தது. இந்த நிலையில்தான், இளம்பெண்களை பெல்ட்டால் அடித்து, பாலியல் உறவுக்கு அந்த காமுகக் கூட்டம் இணங்க வைக்கும் அதிர்ச்சிகரமான வீடியோ வெளியானது.

“அண்ணா.. பெல்ட்டால அடிக்காதீங்கண்ணா.. நானே டிரஸ்ஸை கழட்டிடுறேன் அண்ணா” என்ற இளம்பெண்ணின் கதறலும், “உன்னை நம்பித்தானே வந்தேன்” என்ற இயலாமையின் குரலும் இதயத்தை நொறுக்கியது. அந்த வீடியோவையும் அதிலிருந்த குரலையும் கேட்ட தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாகப் பெண்கள், “இப்படிப்பட்ட கயவர்களை விட்டு வைப்பதா?” என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். எதிர்க்கட்சிகளின் போராட்டமும் வலுவடைந்த நிலையில், மாவட்ட காவல்துறை அதிகாரி மூலம், புகார் கொடுத்த பெண்ணின் பெயரை வெளியிடச் செய்து, மற்ற பெண்களை அச்சுறுத்தும் வேலையை செய்தது அ.தி.மு.க அரசு.

சி.பி.சி.ஐ.டி போலீசின் விசாரணை என்பது குற்றவாளிகளைப் பிடிப்பதற்குப் பதில், பாலியல் குற்றம் தொடர்பான வீடியோவையும் செய்தியையும் வெளியிட்ட பத்திரிகையை மிரட்டும் வகையிலேயே இருந்தது. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் தொடர்ச்சியானப் போராட்டம் மற்றும் வலியுறுத்தலுக்குப் பிறகே, சி.பி.ஐ. வசம் வழக்கை ஒப்படைக்க ஒப்புக்கொண்டது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு. கைது செய்யப்பட்ட 9 பேரைக் காப்பாற்றும் வகையில், சி.பி.ஐ.க்கு ஒப்படைப்பதாக அறிவிக்கப்பட்ட பிறகும், சி.பி.சி.ஐ.டி வசமே வழக்கு இருந்தது. நீதிமன்றம் கண்டித்த பிறகே, சி.பி.ஐ வசம் சென்றது.

தமிழ்நாட்டில் 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு தந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை சாட்சியமாக அளித்தனர். குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன்களில் அழிக்கப்பட்ட வீடியோக்கள் மீட்கப்பட்டன. வழக்கு வலுவாக அமைந்தது. இதனையடுத்துதான், மே 13ந் தேதி கோவை மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 9 பேரின் குற்றமும் நிரூபிக்கப்பட்டு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் இரட்டை ஆயுள், நான்கு ஆயுள் தண்டனை பெற்றவர்களும் உண்டு.

டெல்லியில் நிர்பயா என்ற இளம்பெண் பாலியல் கொடுமைக்குள்ளான பிறகு, பெண்கள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு பெருகி வந்த நிலையில், பொள்ளாச்சி கொடூரம் ஒரு கருப்பு பக்கமாக மாறியது. அரசியல் அதற்கொரு காரணமாக இருந்தது. இந்த வழக்கில் தப்பியவர்களும் உண்டு. சிக்கியவர்களைத் தப்ப விடக்கூடாது என்பதே பெரும்பான்மையான எதிர்பார்ப்பு. மக்கள் நம்பியது, நீதிமன்றத்தைத்தான்.

தற்போதைய தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள தண்டனையைவிட கூடுதல் தண்டனை அளித்திருந்தாலும் மக்கள் வரவேற்கவே செய்வார்கள். மேல் முறையீடுகளில் எக்காரணம் கொண்டும் இந்தத் தண்டனை குறையக்கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

TAGGED:cbiCoimbatorecourtjudgementpollachitamilnadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article FITJEEE FIITJEE நுழைவுத் தேர்வு பயிற்சி மையம் – பல கோடி மோசடி!
Next Article tump modi spark media தலையங்கம்: போரில் பலியான உண்மைகள்!

உலகம்

Ebola outbreak,
எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
உலகம் May 19, 2026 at 4:18 pm
Russia Satan 2 missile,
உலக நாடுகளை அதிரவைக்கும் ரஷ்யாவின் ‘சாத்தான் 2’ ஏவுகணை!
உலகம் May 14, 2026 at 1:18 pm
Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 7, 2026 at 6:00 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

Ebola outbreak,
எபோலா பரவலுக்கு காங்கோவில் 131 பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அவசரநிலை பிரகடனம்!
May 19, 2026 at 4:18 pm
vijay seeman house
விஜய் மக்களுக்கு செய்த துரோகம் – சீமான் கண்டனம்
May 19, 2026 at 3:45 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?