சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லிக்கு செல்வதற்கு முதல் நாளே மும்பைக்கு பறந்தார் த்ரிஷா. மும்பையில் அவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள், பாஜகவினரை சந்தித்துள்ளார். அதன்பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. கூட்டணி ஒப்பந்தத்தில் இழுபறி ஏற்பட்டாலும் கூட, அமித்ஷா – த்ரிஷாவின் இந்த சந்திப்புக்கு பிறகுதான் விஜய்க்கு சிபிஐ விசாரணை மிக எளிதாக இருந்திருக்கிறது. நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் ஜனநாயகன் படத்திற்கும் விடிவு காலம் பிறந்திருக்கிறது. மீண்டும் ஜனநாயகன் படம் மறு தணிக்கைக்கு உள்ளானது.

அமித்ஷா – த்ரிஷா பேச்சுவார்த்தையில் முடிவு எட்டாத நிலையில் பழனிசாமியின் மகன் மிதுனும் தன் பங்கிற்கு த்ரிஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

பேச்சுவார்த்தையில் நடந்தது பற்றி விஜய்யுடன் ஆலோசித்து வருகிறார் த்ரிஷா. இதில் த்ரிஷா எடுக்கவிருக்கும் முடிவுக்கே விஜய் கட்டுப்படுவார் என்கிறது தவெக பனையூர் வட்டாரம்.



