வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார்.
என்.டி.ஏ. கூட்டணியுடன் பேச்சு, ராமதாஸ், சசிகலாவுடன் பேச்சுவார்த்தை என்று ஒவ்வொரு நாளும் செய்திகள் வந்துகொண்டே இருந்தன. கடைசியில் அதுவும் விஜய் டெல்லி சிபிஐ விசாரணைக்கு சென்று வந்த பின்னர் யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அது எல்லாம் வதந்தி என்கிறார் சிடிஆர் நிர்மல்குமார்.
’’சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் வர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்திகூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.
இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் பரப்பப்படுகின்றன.

பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்!’’ என்கிறார்.
கூட்டணி அமையாமல் தனித்து விடப்பட்டதால் வந்த ஆத்திரமா? தாங்கள் பரப்பிய வதந்திகளையே நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.



