கூவத்தூர் அருகே உள்ள ரிசார்ட்டில் தவெக எம்.எல்.ஏக்களை அடைத்து வைக்கிறார் விஜய்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வென்றிருக்கிறது. பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏக்கள் வேண்டும் என்பதால் பல கட்சிகளுடன் பேசி வந்தார் விஜய்.
இதில் பாஜகவின் அழுத்தத்தால் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தர அதிமுக முன் வந்திருக்கிறது. இது தொடர்பாக நாளை வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி.

இது ஒரு புறம் இருக்க, சென்னை வந்திருக்கும் வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏக்கள் திடீரென்று அந்தர் பல்டி அடித்துவிட்டால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்த விஜய், கூவத்தூர் பாணியை கையில் எடுத்திருக்கிறார்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூவத்தூர் ரிசார்ட் அருகில் உள்ள மாமல்லபுரம் ரிசார்ட்டிலேயே தனது எம்.எல்.ஏக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஃபோர் பாயிண்ட் ஷெரட்டன் ரிசார்ட்டில் தவெக எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு சில மணி நேரம் முன்பு வரையிலும் அவர்கள் அங்கேதான் தங்க வைக்கப்பட உள்ளனர்.



