ஓபிஎஸ்க்காக வாழ்நாளை இழக்க முடியாது என்று 88 வயதில் தனிக்கட்சி தொடங்கி இருக்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
அதிமுக பிளவுபட்டதில் இருந்தே ஓபிஎஸ்க்கு பக்கபலமாக இருந்து வந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன். இதனால் அவரை அதிமுகவில் இருந்து நீக்கினார் எடப்பாடி.

ஓபிஎஸ் அணி எடுத்த பல்வேறு முயற்சிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கிவந்தார் பண்ருட்டியார். கடைசியில் என்ன ஆனதோ தெரியவில்லை. ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிவிட்டார் பண்ருட்டியார்.

இப்போது அவர், ’எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று தனிக்கட்சியும் தொடங்கிவிட்டார். ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்குவார் என்று பண்ருட்டியாரும் அதற்கேற்ற முயற்சிகளை முன்னெடுத்து வந்தார். ஆனால், மறுபடியும் மறுபடியும் எடப்பாடியிடமே சென்று ஓபிஎஸ் மன்றாடிக் கொண்டிருப்பதால் கடுப்பாகி நானே தனிக்கட்சி தொடங்கிவிடுகிறேன் என்று முடிவெடுத்திருகிறார் பண்ருட்டியார் என்றே தெரிகிறது. பாமவில் இருந்து விலகியபோது ‘மக்கள் நல உரிமைக்கழகம்’ தனிக்கட்சி தொடங்கிய பண்ருட்டியார், இப்போது ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி 88 வயதில் மீண்டும் ஒரு தனிக்கட்சி தொடங்கி இருக்கிறார்.



