நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்த கடைசி திரைப்படம் என சொல்லப்படும் ஜனநாயகன் திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகுவதற்கு முன்னே இணையதளத்தில் வெளியாகி திரைப்பட குழுவினர் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு திரைப்பட நடிகர்கள்,நடிகைகள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்ததோடு, குற்றவாளிகள் தண்டிக்க பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். தொடர்ந்து, இதுகுறித்து தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசாரிடம் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் புகார் அளித்திருந்தது.

இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படம் இணையதளத்தில் கசிந்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இவ்வழக்கில் 6 பேர் கைதாகி இருந்தனர்.மேலும், Freelancer Assistant Visual Editor மூலம் ஜனநாயகன் படம் கசிந்தது சைபர் கிரைம் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, டிஜிட்டல் தடயங்கள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் வேறொரு படத்தின் வீடியோ எடிட்டரான ஒருவர், ‘ஜனநாயகன்’ படம் எடிட் செய்யப்பட்ட ஸ்டூடியோவில் நுழைந்து படத்தை திருடியதாக தகவல் தெரிவிக்கின்றன.(Online Tamil News)


