அடுத்த முதல்வர் என்கிற நம்பிக்கையில் களமிறங்கிய விஜய் அந்த நம்பிக்கையை இழந்துவிட்டார். அதனால்தான் அவரது செயல்பாடுகள் இப்படி இருக்கின்றன என்று ஆதாரங்களை அடுக்கி இருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி.
*மாற்று சக்தி விஜய் என்று மக்கள் நம்பினார்கள். ஆனால் இன்றைக்கு விஜய்யின் செயல்பாடுகளை எல்லாம் பார்த்துவிட்டு அதற்கான வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் மக்கள்.
*தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தவெகவின் செயல்பாடுகள் ஒவ்வொன்றுமே கேலிக்குரியதாகிவிட்டது

*புதுச்சேரி தேர்தல் நாளில் ஏன் கடலூர் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்க வேண்டும்? அப்புறம் ஏன் புதுச்சேரி தேர்தலை காரணம் காட்டி ரத்து செய்யவேண்டும்? எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை தவெகவுக்கு. சிறுபிள்ளைத்தனமாகத்தான் இருக்குது தவெக.
*234 தொகுதிகள் இருக்கையில், நாலு ஊருக்கு மட்டும் போய் ஸ்டாலின் சார் என்று பேசிவிட்டு வந்தால் வெற்றி கிடைத்துவிடுமா?
*தவெக வேட்பாளர்களுக்கு வேட்பு மனுவை கூட பூர்த்தி செய்யத் தெரியவில்லை

*நமக்கு வெற்றி கிடைக்காது என்பதை விஜய் யூகித்துவிட்டார். அவமானகரமான தோல்விதான் கிடைக்கப் போகிறது. அதை சமாளிக்க சரியான காரணங்கள் வேண்டும் என்று நினைத்துதான் பிரச்சாரங்களை ரத்து செய்து வருகிறார். தேர்தலில் தோற்ற பின்னர் திமுக பிரச்சாரம் செய்யவிடாமல் தடுத்தது. அதனால்தான் தோல்வி என்று சமாளிப்பார் விஜய்.
*காரைக்குடியில் 12.30ல் இருந்து 2.30 மணி வரை அனுமதி கொடுத்திருக்கிறார்கள். திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு வேனில் போகும் போது இடையூறுகள் வரும் என்பது தெரியும். ஒரு மணி நேரம் முன்கூட்டியே ஏன் போகவில்லை

*2.30 மணி வரைதான் அனுமதி என்கிறபோது 2.40 மணிக்குத்தான் விஜய் சென்றார். ஒரு 10 நிமிசம் பேசினால் என்ன? வழக்கு போட்டால் போடுங்க என்று சொல்லிவிட்டு வரவேண்டியதுதானே? சீமான் இப்படித்தான் சொல்வார். சீமானுக்கு இருக்கும் துணிச்சல் விஜய்யிடம் இல்லை.
*மக்கள் செல்வாக்கு இருந்தும் அரிய வாய்ப்பு இருந்தும் நழுவவிட்டார் விஜய்
*தேர்தலை விஜய்யும் தவெகவினரும் லெப்ட் ஹேண்டில் டீல் செய்கிறார்கள்
*ஒரு கட்டத்தில் விஜய் நம்பிக்கையை இழந்துவிட்டார். தவெக மீது மக்கள் வைத்த நம்பிக்கையும் குறைந்துவிட்டது

*பிரச்சாரம், சாலைவலத்தில் விஜய் செய்வது எல்லாமே நடிப்பு மாதிரி தெரியுது. எம்.ஜி.ஆர். குழந்தைகளை கொஞ்சுவது, ஏழைத்தாய்மார்களை கட்டிப்பிடித்து அன்பு செலுத்துவது எல்லாம் இயல்பால இருக்கும். விஜய் செய்வது எல்லாம் நடிப்பாக இருக்கிறது. செயற்கைத்தனமாக இருக்கிறது. இது மக்களிடத்தில் எடுபடவில்லை



