நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 107 இடங்களை வென்றது. பெரும்பான்மை இல்லாததால் தொங்கு சட்டசபை உருவானதால் காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவை நாட, அக்கட்சியும் ஆதரவு அளித்தது. இதன் மூலம் தவெகவின் பலம் 112 என்று ஆனது. மேலும் 6 எம்.எல்.ஏக்களின் பலம் வேண்டும் என்கிற நிலையில் அதை சட்டப்பேரவையில் நிரூபித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து , ஆட்சியமைக்க நேற்று ஆளுநரிடம் உரிமை கோரினார் விஜய்.
பெரும்பான்மையை நிரூபித்தால்தான் ஆட்சியமைக்க அழைக்க முடியும் என்று கறாராக இருக்கிறார் ஆளுநர். இதையடுத்து மீண்டும் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்.

அதற்கு ஆளுநர் மேலும் 6 எம்.எல்.ஏக்கள் இல்லாததால், தற்போதைய சூழலில் பெரும்பான்மை கிடைத்துவிடும் என்ற யூகத்தின் அடிப்படையில் பதவி பிரமாணம் செய்து வைத்தால் புதிய ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று கூறி இருக்கிறார் ஆளுநர் அர்லேகர்.
இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திணறுகிறது தவெக. இந்த சூழலில் ‘’தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள தவெக ஆட்சி அமைப்பதற்கு திமுக இடையூறு செய்யாது’’ என்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
அவர் மேலும், ‘’தமிழநாட்டில் புதிய அரசு அமைக்கும் விவகாரத்தில் அரசியலமைப்பு சிக்கலையோ, நெருக்கடியையோ ஏற்படுத்த விரும்பவில்லை. உடனடியாக மீண்டும் ஒரு தேர்தல் வருவதையும் விரும்பவில்லை’’ என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.



