நித்தம் ஒரு வானம்’ படத்தின் இயக்குனர் ரா. கார்த்திக் இயக்கத்தில், நடிகை பிரியங்கா மோகன் மற்றும் தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் (ஸ்குவிட் கேம் தொடர் புகழ்) ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘மேட் இன் கொரியா’.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த மார்ச் 12-ம் தேதி வெளியான இத்திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. சிறுவயது முதலே கொரிய கலாசாரத்தின் மீது ஈர்ப்பு கொண்ட செண்பா (பிரியங்கா மோகன்), அதை அனுபவித்துப் பார்க்க மேற்கொள்ளும் பயணமும், அதில் ஏற்படும் சவால்களுமே இந்த படத்தின் கதையாகும்.

சுற்றுலாத் துறை தூதராக நியமனம்:
இப்படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வந்திருந்த தென் கொரிய பிரதமர் லீ ஜே மியுங் (Lee Jae Myung)-ஐ பிரியங்கா மோகன் நேரில் சந்தித்துப் பேசினார்.

அதன் தொடர்ச்சியாக, தற்போது தென் கொரிய நாட்டு சுற்றுலாத் துறையின் கௌரவ தூதராக (Honorary Ambassador of Korea Tourism) நடிகை பிரியங்கா மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு தமிழ்ப் படத்திற்கு கிடைத்த வரவேற்பின் மூலம், ஒரு தென்னிந்திய நடிகைக்கு இத்தகைய அபூர்வமான சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பது சினிமா வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.(Online Tamil News)


