திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நேற்று நன்றி சொன்னார் முதல்வர் விஜய். அவரது நேற்றைய பேச்சு முழுவதும் பிரச்சார பாணியிலேயே அமைந்தது என்றும், முதல்வர் என்கிற பொறுப்பை உணர்ந்து அவர் பேசவில்லை என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவும் தனது கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து தனது கண்டனங்களை பதிவு செய்தார்.

‘’உங்களுடைய நடத்தையில் நாணயம் உள்ளதா விஜய் ப்ரோ? திருச்சியில் கை, கால்களை ஆட்டி பேசும் விஜய் ப்ரோ சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி கேட்கும்போது எப்படி உட்கார்ந்திருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். திருச்சியில் இருந்த உடல்மொழி எங்கே போனது?
கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் முதல்வர் பேசுகிறார். நையாண்டி, நக்கல் பேசுவது முதல்வருக்கு அழகல்ல ப்ரோ விஜய்.
அல்லு சில்லு என்று விமர்சிக்கிறீர்கள். அவர்களைத்தான் நேரில் சந்தித்து அவர்களுடன் தேநீர் அருந்தி அவர்களின் ஆதரவை பெற்றீர்கள்?
விஜய் ப்ரோ உங்க ஆட்சியில ஒண்ணுமே சரியில்ல. இதனால் தூக்கமே இல்ல. உடனே நல்ல முடிவு எடுங்க ப்ரோ. இல்லேன்னா நல்லா இருக்காது ப்ரோ.

முதிர்ச்சி இல்லாத முன் அனுபவம் இல்லாத , சிந்திக்காத, தான் தோன்றித்தனமான அரசாங்கத்தை தந்து கொண்டிருக்கிற முதலமைச்சர் அவர்களே, ஒரே தலைவர், ஒரே நம்பிக்கை நீங்கள்தான் என்று சொல்கிறீர்கள். உங்களுக்கு ஓட்டு போட்டது 35 சதவிகிதம்தான். வெற்றி பெற்றுவிட்டீர்கள். அதுவும் 35 சதவிகிதம்தான். மீதம் 65 சதவிகிதம் பேர் உங்களை ஆதரிக்கவில்லை. அதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் தான் தலைவர் என்று சொல்ல எந்த அதிகாரமும் இல்லை, அனுமதியும் இல்லை.
எங்கள் தலைவரை எப்போது பார்த்தாலும் குறை சொல்லி, அதில் எள்ளலும் துள்ளலுமாக பேசி , நக்கல் நையாண்டி பேசி முதலமைச்சர் நாற்காலிக்கு உள்ள மரியாதையை குறைத்துக்கொள்ளாதீர்கள்.
அரசியல் சட்டத்தை மீறினால் ஆட்சியை கலைக்கலாம் என்று இருந்தும் நாங்கள் மீறி இருக்கிறோம். ஆனால் விஜய் ப்ரோ தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு அனுமதி கேட்டு கோரிக்கை வைக்கிறார். தவெக எதற்கும் லாயக்கில்லாத சக்தியாக இருக்கிறது.’’



