சிறுமிகளை காதல் வலையில் விழ வைத்து அவர்களை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அமராவதி பரத்வாடா பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் முகமது அயாஸ் என்கிற தன்வீர். இவர் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ஸ்நாப் சாட் குரூப் மூலம் பள்ளி, கல்லூரி மாணவிகளை குறிவைத்து வளைத்துள்ளார்.
காதல் வலையில் விழுந்த சிறுமிகளை மும்பை, புனேவுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது அந்தரங்கத்தை வீடியோ, புகைப்படங்களாக எடுத்துள்ளார். சில வீடியோக்கள், புகைப்படங்களை இணையங்களின் பதிவேற்றி இருக்கிறார். வீடியோக்களை காட்டி மிரட்டி சில சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி இருக்கிறார் தன்வீர்.

பாஜக எம்.பி. அனில் போண்டே மூலம் இந்த விவகாரம் வெளியே வந்திருக்கிறது. தன்வீர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் விசாரணையில் 180 சிறுமிகளை சீரழித்ததும், தன்வீரின் செல்போனில் 350 அந்தரங்க வீடியோக்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது.
தன்வீருடன் வேறு யார் யார் எல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் பரத்வாடாவில் உள்ள முகமது அயாசின் வீட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று சொல்லி வீட்டின் ஒருபகுதியை இடித்து தள்ளி இருக்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.



