லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ், ஐஜேகேவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து லால்குடி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இவர் வேட்புமனுவின் போது 5 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து கணக்கை காட்டி இருக்கிறார்.
மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் புதுச்சேரியில் தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் களமிறங்கி இருக்கிறார். இவர் வேட்புமனுவின் போது தனது சொத்து மதிப்பு 6 ஆயிரம் கோடி ரூபாய் என்று காட்டி இருக்கிறார்.

மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூனா தவெகவில் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆக உள்ளார். இவர் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனுவில் தனது மனைவி டெய்சியின் சொத்துக்களை மறைத்ததாக வில்லிவாக்கம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் தேவராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மார்ட்டின் பிராப்பர்டி டெலவப்பர்ஸ் நிறுவனத்தின் 117 கோடி ரூபாய் சொத்துக்களையும், டாமினண்ட் டவர்ஸ் அண்ட் டிரேடர்ஸின் 123 கோடி ரூபாய் சொத்துக்களையும் டெய்சிதான் நிர்வகித்து வருகிறார். இதை ஆதவ் அர்ஜூனா வேட்புமனுவில் மறைத்தது ஏன்? டெய்சிக்கு சொந்தமான சொத்துக்களின் விபரங்களை எதையும் ஆதவ் அர்ஜூனா ஏன் வேட்புமனுவில் காட்டவில்லை? என்று தேர்தல் ஆணையரிடம் புகாரளித்தும் அந்த புகாரின் மீது நடவடிக்கை இல்லாததால் வழக்கு தொடர்ந்துள்ளார் தேவராஜன்.



