கணவர் மோசமாக தாக்கியதில் வயிற்றில் இருந்த நான்கு மாத சிசு இறந்துவிட்டது என்று உருக்கத்துடன் வீடியோவில் பேசி இருக்கிறார் பாடகி கெனிஷா. ரவிமோகன் – ஆர்த்தி விவகாரத்தில் இந்த விளக்கத்தை அவர் அளித்திருக்கிறார்.
நடிகர் ரவிமோகனும் ஆர்த்தியும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளனர். இந்த நிலையில் பாடகி கெனிஷாவும் ரவிமோகனும் கட்டிப்பிடித்து பாடும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு சில ரசிகர்கள் கெனிஷா பற்றி கமெண்ட் அடிக்க, ரவிமோகன் குடும்பத்தையே கெடுத்துவிட்டாய் என்று கமெண்ட் அடிக்க, அவர்களுக்கு பதிலடி தருகின்றேன் என்கிற பெயரில் ஆர்த்தியை கெட்ட வார்த்தையில் விமர்சிக்க, இதனால் மன உளைச்சல் என்று அவர் நீதிமன்றம் சென்றுவிட்டார்.

தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார் கெனிஷா. அதில், 2013ம் ஆண்டில் தாயை இழந்துவிட்டதாகவும், 2017ம் ஆண்டில் தந்தையை இழந்துவிட்டதாகவும், 4 வயதிலேயே உறவினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும்,விபரம் அறியாத 18 வயதிலேயே திருமணம் செய்துவைத்தபோது கணவரின் மோசமான தாக்குதால் வயிற்றில் இருந்த நான்கு மாத சிசு இறந்துவிட்டது. அதன் பின்னர் திருமண் வாழ்க்கையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் இப்படிப்பட்ட பாதிப்பை கடந்து வந்த ஒரு பெண் எப்படி ஒரு குடும்பத்தை கெடுப்பார்? என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.

தன்னோட நான்கைந்து குழந்தைகளையும் தாய், தந்தையையும் ஆசிரமத்தில் சேர்த்துவிட்டு ரவிமோகனுடன் ஊர் சுற்றிவந்து அவரது குடும்பத்தை கெடுத்துவிட்டதாக பலரும் சொன்ன குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து இவ்வாறு வீடியோ வெளியிட்டிருக்கிறார் கெனிஷா.



