• அரசியல்
    அரசியல்Show More
    c vijayabaskar
    இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
    May 29, 2026 at 6:36 pm
    poongundran sankaralingam
    தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?
    May 29, 2026 at 6:01 pm
    aadhav arjuna speech
    ஆதவ் அர்ஜுனாவின் தற்குறி பேச்சு – விவசாயிகள் கடும் கண்டனம்
    May 29, 2026 at 1:31 pm
    ammk ttv dinakaran
    சொல்லப்படும் தகவல் உண்மையென்றால் தவெக அரசு எதற்கு? டிடிவி தினகரன் விளாசல்
    May 29, 2026 at 12:22 pm
    modi meet vijay
    7 நிமிசம் கொடுத்த மோடி – 1 நிமிசம் கூட கொடுக்காத அமித்ஷா
    May 28, 2026 at 4:52 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    vijay julie
    நான் என் பிள்ளையை இழந்ததற்கு விஜய்தான் காரணம் – ஜூலி கண்ணீர் பேட்டி
    2026-05-29
    dmk 1
    இனிமேல் எங்களைப் பற்றி பொய்ச்செய்திகள் பரப்பினால்… தவெகவினருக்கு திமுக கடும் எச்சரிக்கை
    2026-05-25
    kovai sulur
    கோவை சிறுமி கொடூர கொலை : தலைவர்கள் கண்டனம்
    2026-05-23
    sulur3
    தமிழகத்தை உலுக்கிய சூலூர் சிறுமி கொடூர கொலை -நடந்தது என்ன?
    2026-05-23

    அண்மைச் செய்திகள்

    Tuberculosis death rate Tamil Nadu
    காசநோயாளிகளுக்கு மறுவாழ்வு தந்த அரசுத் திட்டம்: பாதியாகக் குறைந்த மரணங்கள்!
    2026-06-01
    c vijayabaskar
    இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
    2026-05-29
    poongundran sankaralingam
    தவெகவுக்கு தாவுகிறாரா ஜெ., உதவியாளர்?
    2026-05-29
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    2026-05-29
  • இந்தியா
    இந்தியாShow More
    34 Crore Blood Money Kerala
    சவுதியில் மரண தண்டனை கைதியை ரூ.34 கோடி செலுத்தி மீட்ட கேரள மக்கள்!
    May 29, 2026 at 6:01 pm
    Aalin Sherin Abraham
    கேரளாவின் இளம் வயது உறுப்பு தான கொடையாளி ‘ஆலின்’ பெயரில் புதிய நோட்டு புத்தகங்கள் அறிமுகம்!
    May 26, 2026 at 6:00 pm
    West Bengal madrasas,
    மேற்குவங்க மத்ரசாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடுவது கட்டாயம் என உத்தரவு!
    May 21, 2026 at 4:48 pm
    Cockroach Janata Party,
    நீதிபதி பேச்சுக்கு எதிர்ப்பு: சமூக வலைத்தளங்களை கலக்கும் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”
    May 21, 2026 at 12:43 pm
    Kolkata protest,
    கொல்கத்தா தொழுகை போராட்டம் வன்முறையானது: போலீஸ் தடியடி, 40 பேர் கைது!
    May 19, 2026 at 2:13 pm
  • உலகம்
    Iran Oil Sanctions
    உலகம்
    ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
    2026-05-29
    Iran internet restoration
    உலகம்
    3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
    2026-05-26
    Quetta suicide attack,
    உலகம்
    பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
    2026-05-25
    Air France Flight 447 crash
    உலகம்
    288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
    2026-05-22
    Meta Layoffs,
    உலகம்
    மெட்டா மற்றும் அமேசான் பணிநீக்கம்: அமெரிக்காவில் தவிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் – 60 நாட்கள் மட்டுமே கெடு!
    2026-05-21
    North Korea politics-Online Tamil News
    உலகம்
    வடகொரியாவின் அடுத்த அதிபர் : 13 வயது மகளை வாரிசாக அறிவிக்கும் கிம் ?
    2026-02-14
    Rini Sampath
    உலகம்
    வாஷிங்டன் டிசி மேயர் தேர்தல்: களம் காணும் தமிழ்ப் பெண் ரினி சம்பத்!
    2026-04-04
    trump
    உலகம்
    அமெரிக்காவின் பரஸ்பர வரி! இந்தியாவிற்கு என்ன சிக்கல்?
    2025-04-05
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தலையங்கம் : தீர்ப்புகள் திருத்தப்படலாம்
Share
37°C
Chennai
few clouds
39° _ 37°
50%
3 km/h
Mon
37 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம் : தீர்ப்புகள் திருத்தப்படலாம்

Spark Web Desk
Last updated: 2025-10-15 5:58 am
Spark Web Desk Spark Web Desk 100 Views
Share
vijay supreme court
SHARE

கரூரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிர்ப்பலியான விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்கும் என்றும், உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சரியா அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. இது இடைக்கால உத்தரவு என்றும் தெரிவித்துள்ளது. கரூர் உயிர்ப்பலிகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை இதன்காரணமாக இனி நடைபெறாது. சிறப்பு புலனாய்வுக் குழு இதுவரை விசாரித்த விவரங்களையும், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை விவரங்களையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளை வழங்குகின்றன. அவற்றை சட்டவல்லுநர்கள் ஆராய்ந்து கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தின் எல்லைக்குட்பட்டதாக கரூர் வழக்கு இல்லையென்றும், சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக பதிவு செய்து விசாரித்தது குறித்தும் உயர்நீதிமன்ற பதிவாளரை பதிலளிக்க உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவில் இருந்த பல கருத்துகள் குறித்து கண்டனக் கருத்துகளையும் தெரிவித்திருக்கிறது. அதே நேரத்தில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 5 மனுக்களில் இரண்டு பேர், அதுவும் கரூர் நெரிசலில் உயிர்ப்பலியானவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர், தாங்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்யவில்லையென்றும், தங்களிடம் நிவாரணம் வழங்குவதாகக்கூறியும், வேலை வாங்கித் தருவதாகக் கூறியும் கையெழுத்து வாங்கிவிட்டார்கள் என்று தெரிவித்திருப்பது அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது. இது குறித்து, தேவைப்பட்டால் சி.பி.ஐ. விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளித்த நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

vijay angry

மிக முக்கியமான வழக்கு குறித்து அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்தது குறித்தும் உச்சநீதிமன்றம் தன் கருத்துகளைப் பதிவு செய்துள்ளது. இது குறித்து விளக்கும் சட்ட வல்லுநர்கள், “இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சிக் கூட்டத்திலும் இப்படியொரு நெரிசல் ஏற்பட்டு உயிர்ப்பலிகளானதில்லை. இது மிகவும் கொடூரமான நிலவரம். கூட்டம் நடத்திய தலைவர் உள்பட அவரது கட்சியை சார்ந்த யாரும், இந்த நெரிசலுக்கும் உயிர்ப்பலிகளுக்கும் பொறுப்பேற்காமல் பொறுப்பற்றத்தனமாக இன்று வரை உள்ளதுடன், காவல்துறை மீதும், அரசு மீதும், மருத்துவர்கள்-ஆம்புலன்ஸ் செயல்பாடுகளுக்கு உள்நோக்கம் கற்பித்தும் திட்டமிட்டுப் பரப்பிய சதிக்கோட்பாடுகள் அதிவேகத்தில் பரவிய நிலையில், மக்களிடம் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டியது அதிகாரிகள் கடமையாகும். அதனால்தான் வீடியோ ஆதாரங்களுடனும், மற்ற புள்ளிவிவரங்களுடனும் தங்கள் விளக்கங்களை அளித்தனர். அதனை செய்யாமல் விட்டிருந்தால், தமிழ்நாட்டில் பதற்றம் அதிகமாகி, நிலைமை மேலும் மோசமாகியிருக்கும். அந்த வகையில் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் தங்கள் கடமையை செய்திருக்கின்றனர் என்ற கோணத்தில் இதனை அணுகவேண்டும்” என்கின்றனர்.

உச்சநீதிமன்ற உத்தரவில், சி.பி.ஐ.க்கு எல்லா வசதிகளையும் அதற்குரிய செலவுகளையும் தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சி.பி.ஐ.க்கு ஒத்துழைப்பாக இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும், அவர்கள் தமிழ்நாட்டு கேடரை சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டை சொந்த மாநிலமாகக் கொண்டவர்களாக இருக்கக்கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பணியாற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளில் கேடர் அதிகாரிகள், தமிழ்நாட்டு அதிகாரிகள் என்று பிரித்திருப்பது புதுவகை அணுகுமுறையாக இருப்பது  குறித்து வழக்கறிஞர் அருள்மொழி தன் கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். “இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், இது இந்த சமூகம் சார்நத வழக்கு. அதனால் இந்த இந்த சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள்தான் இருக்கவேண்டும். இந்த இந்த சமூகத்து நீதிபதிகள் இருக்கக்கூடாது என்று உத்தரவிடும் நிலைகூட வருமா?” என்கிற கோணத்தில் அவருடைய கருத்து அமைந்துள்ளது.

vijay karur

மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.விஜயன், “கரூர் நெரிசல் சம்பவத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியது சிறப்பான உத்தரவல்ல. உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குழு கண்காணிக்கம் என்பதெல்லாம் சற்று மிகையாக உள்ளது” என கருத்து தெரிவித்துள்ளார். ஒரு தீர்ப்பு அல்ல உத்தரவு குறித்து சட்டரீதியான பார்வையுடன் பல கருத்துகள் வெளிப்படுவது இயல்பு. உச்சநீதிமன்ற அமர்வின் உத்தரவு என்பதால், அந்த உத்தரவின்படிதான் இனி விசாரணை நடைபெறும்.

இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி வழக்கில் இதைவிட பல கட்டுப்பாடுகள் இருந்தன. சி.பி.ஐ கோர்ட் விசாரணையை உச்சநீதிமன்றமே நேரடியாக கண்காணிக்கும் என்று உத்தரவிடப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பை நாடறியும். கரூர் நெரிசல் உயிர்ப்பலி வழக்கிலும், இறுதி உத்தரவில் தீர்ப்புகள் திருத்தப்படலாம்.

TAGGED:BJPedapadipalanisamykarurSupreme Courttamilnadutvk vijayvijay
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article vijay aadhav arjuna ஆதவ் அர்ஜூனாவால் சிபிஐயிடம் சிக்கப்போகும் விஜய்?
Next Article vijay tvk sad 1 விஜயின் கருப்பு நிற பேக் – சிபிஐ விசாரிக்க கோரிக்கை

உலகம்

Iran Oil Sanctions
ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
உலகம் May 29, 2026 at 11:00 am
Iran internet restoration
3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் சர்வதேச இணைய சேவை!
உலகம் May 26, 2026 at 3:15 pm
Quetta suicide attack,
பாகிஸ்தானில் பயங்கரம்: ராணுவ வீரர்கள் சென்ற ரயில் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 30 பேர் பலி!
உலகம் May 25, 2026 at 4:48 pm
Air France Flight 447 crash
288 பேர் பலியான கோர விபத்து: ஏர்பஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு ₹720 கோடி அபராதம்!
உலகம் May 22, 2026 at 5:20 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • உலகம்
  • இந்தியா
  • தலையங்கம்

அண்மைச் செய்திகள்

Tuberculosis death rate Tamil Nadu
காசநோயாளிகளுக்கு மறுவாழ்வு தந்த அரசுத் திட்டம்: பாதியாகக் குறைந்த மரணங்கள்!
Jun 1, 2026 at 11:25 am
c vijayabaskar
இறுதிகட்ட பேச்சுவார்த்தை! திமுகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?
May 29, 2026 at 6:36 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?