பிரெஞ்சு மொழியில் பதவியேற்க நினைத்தார் பாகூர் திமுக எம்.எல்.ஏ. செந்தில். சபாநாயகர் அன்பழகன் அதற்கு அனுமதி மறுத்தார். அதனால் மலையாள மொழியில் பதவியேற்றார்.
புதுச்சேரியில் 1954 வரையிலும் பிரெஞ்சு மொழிக்கு உட்பட்டதாகவே இருந்தது. இந்நிலையில் இன்று பிரெஞ்சு மொழியில் பதவியேற்க அனுமதி மறுக்கப்பட்டதால் மலையாள மொழியில் பதவியேற்ற செந்தில், புதுச்சேரியில் இந்தியை திணிக்க முயற்சி நடக்கிறது என்று குற்றம்சாட்டினார்.

விஜய் என்ன கடவுளா? என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் விளாசினார்.
மணவெளி தொகுதி தவெக எம்.எல்.ஏ. ராமு, பதவியேற்றபோது ‘கடவுளறிய…’ என்று சொன்னபோது விஜய் படத்தை காட்டினார். அதாவது விஜய் படத்தை காட்டி கடவுள் என்று கூறினார். உடனே சபாநாயகர் அன்பழகன், ராமுவை கண்டித்தார். ‘’அட்டையை காட்டி கடவுள் என்கிறார் ராமு. இங்கு ஏற்கனவே 1008 கடவுள்கள் இருக்கிறார்கள். இவர் என்ன 1009வது கடவுளா?’’என்றார்.



