ஜெயலலிதா ஆன்ட்டி என்று சொல்லி இருந்தால் விஜய்யை கொத்து புரோட்டா போட்டிருப்பார் என்று பேசினார் நடிகர் சத்யராஜ்.
தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். திமுக சார்பில் அத்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. ஆர்.டி.சேகர் மீண்டும் போட்டியிடுகிறார். சேகரை ஆதரித்து நடிகர் சத்யராஜ் பிரச்சாரம் செய்தார்.

அப்போது, ‘’விஜய் சின்னப்பையனா இருந்ததில் இருந்தே நான் பார்த்துட்டு வர்றேன். தம்பி ரொம்ப அமைதியான ஆள். யாரிடமும் பேசமாட்டாரே. இவருக்கு அரசியல் செட்டாகுமான்னு நெனச்சேன். கட்சி தொடங்கியதும் பேசப்பேச மரியாதை இல்லாமல் ஸ்டாலின் அங்கிள் என்று சொல்கிறார். நம்ம பார்த்த விஜய் இப்படி இல்லையே. இப்படி மரியாதை இல்லாம.. முதல்வர மரியாத இல்லாம பேசுறாரேன்னு கோபம்.

இதுக்கு முன்னாடி தலைவா பட பிரச்சனையில கொடநாட்டுல போய் கைய கட்டிக்கிட்டு நின்னு, அம்மா.. அம்மா… மன்னிச்சுக்குங்கம்மா.. எப்படியாச்சும் தலைவா படத்த ரிலீஸ் பண்ணி விடுங்கம்மான்னு சொன்னாரு. யோசிச்சுப்பாருங்க. ஸ்டாலின் அங்கிள்னு சொன்னது மாதிரி ஜெயலலிதா மேடத்த ஜெயலலிதா ஆண்டின்னு சொல்லி இருந்தா என்ன ஆகியிருக்கும்? ரோட்டு ஓரத்துல நங்கு நங்குன்னு போடுற கொத்துபுரோட்டா மாதிரி ஆக்கி இருப்பார். அதுக்கு அப்புறம் நான் ரெடிதான் வரவா?ன்னு பாடியிருக்க மாட்டார். ஜெயலலிதா ஆண்டின்னு சொல்லி இருந்தா ஒரே ஒரு பாட்டு மட்டும்தான் பாடியிருக்க முடியும். ’தொட்டபெட்டா ரோட்டு மேல புட்ட பரோட்டா நீ தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா..’ என்ற பாடலைத்தான் பாடியிருக்க முடியும் ‘’ என்று சொல்லிவிட்டு சிரித்தார்.



